ஆப்நகரம்

திண்டுக்கல்லில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 20 மாணவர்கள் காயம்

திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் வேன் ஒன்று சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் காயமடைந்தனர்.

Samayam Tamil 24 Jul 2019, 11:44 am
திண்டக்கல் மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனம் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Samayam Tamil Accident 1


திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடி அருகே புனித வள்ளலார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிலர் வேனில் வந்து செல்கின்றனர். அதன்படி இன்று காலை மாணவர்கள் வேனில் பள்ளிக்கு வந்துகொண்டிருந்தனர்.

அப்போது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடுவதற்காக வேன் ஓட்டுநர் வாகனத்தை சாலையின் ஓரமாக இயக்கியுள்ளார். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது.

இந்த வாகனத்தில் சுமார் 30 மாணவர்கள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்த நிலையில், அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி நிர்வாகத்திடமும் இது தொடபாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி