கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை, தமிழகத்தில் போதிய மழையை தரவில்லை. அதேசமயம் கேரளா, கர்நாடக மாநிலங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தின் மலைப் பிரதேசங்களில் தற்போது நல்ல மழை பெய்யத் தொடங்கியுள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கன மழை பெய்து வருகிறது.
Also Read: நீலகிரியில் வெளுத்து வாங்கிய மழை- அவலாஞ்சியில் 40 செ.மீ. மழை பதிவு!
இதனால் சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
Also Read: தூத்துக்குடியில் கரை ஒதுங்கிய 4.5 மீட்டர் நீள திமிங்கல சுறா!
இன்று கன மழை எச்சரிக்கை காரணமாக, நீலகிரி மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ளார்.
Also Read: விவசாயம் செய்யாமல் புறக்கணிக்க போவதாக விவசாயிகள் சங்கத்தினர் அறிவிப்பு!
அதன்படி, உதகை, கூடலூர், பந்தலூர், குந்தா ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(ஆகஸ்ட் 8) விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களும் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தின் மலைப் பிரதேசங்களில் தற்போது நல்ல மழை பெய்யத் தொடங்கியுள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கன மழை பெய்து வருகிறது.
Also Read: நீலகிரியில் வெளுத்து வாங்கிய மழை- அவலாஞ்சியில் 40 செ.மீ. மழை பதிவு!
இதனால் சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
Also Read: தூத்துக்குடியில் கரை ஒதுங்கிய 4.5 மீட்டர் நீள திமிங்கல சுறா!
இன்று கன மழை எச்சரிக்கை காரணமாக, நீலகிரி மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ளார்.
Also Read: விவசாயம் செய்யாமல் புறக்கணிக்க போவதாக விவசாயிகள் சங்கத்தினர் அறிவிப்பு!
அதன்படி, உதகை, கூடலூர், பந்தலூர், குந்தா ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(ஆகஸ்ட் 8) விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களும் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது.