கோவை: ஜல்லிக்கட்டு போல் தமிழகத்தில் படிப்படியாக மாட்டிறைச்சி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தடை நீங்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக உலகத் தமிழர்களும் ஒன்று கூடினர். வரலாற்றில் பதியும் அளவிற்கு பிரம்மாண்ட போராட்டமாய் விஸ்வரூபம் எடுத்து, உலகமே வியந்து பார்த்தது. இந்நிலையில் இறைச்சிக்காக மாடுகளை விற்கக் கூடாது என்று மத்திய அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. அதற்கு நாடு முழுவதும் பல்வேறு கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன. கேரளாவில் மாட்டுக் கறி திருவிழா நடத்தி, மத்தியில் ஆளும் பாஜக அரசிற்கு எதிர்ப்பு காட்டி வருகின்றனர்.
இதற்கிடையில் கோவையில் எஸ்டிபிஐ கட்சியினர் மாட்டிறைச்சி தடைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தனி மனித உரிமைக்கு எதிரானது என்றும், பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறைகள் நடைபெற்று வருவதாகவும் குற்றம்சாட்டினர். மாட்டிறைச்சியை அனைத்து சமூகத்தினரும் உணவாகப் பயன்படுத்தி வருவதாக சுட்டிக் காட்டினர். மேலும் இதனை தமிழக அரசும் வலியுறுத்த வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர். கோவை ரயில் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட முயன்ற அவர்களை தடுத்து நிறுத்தி, போலீசார் கைது செய்தனர். கேரளாவில் பெரிய அளவில் தொடங்கிய மாட்டிறைச்சிக்கான போராட்டம், தமிழகத்திற்கு நுழைந்துள்ளது.
இது படிப்படியாக பரவி, ஜல்லிக்கட்டு போராட்டம் போல் விஸ்வரூபம் எடுத்து மத்திய அரசுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பும் என்று நம்பப்படுகிறது. அவ்வாறு நடந்தால் 21ஆம் நூற்றாண்டின் வரலாற்றில் இது தமிழர்களின் 2வது எழுச்சி என பதியப்படும் என்பதில் சந்தேகமில்லை. மாட்டிறைச்சி தடைக்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தை முன்னெடுப்பார்களா? அவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் களம் காண்பார்களா? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
SDPI protest against the ban of beef in Coimbatore.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தடை நீங்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக உலகத் தமிழர்களும் ஒன்று கூடினர். வரலாற்றில் பதியும் அளவிற்கு பிரம்மாண்ட போராட்டமாய் விஸ்வரூபம் எடுத்து, உலகமே வியந்து பார்த்தது. இந்நிலையில் இறைச்சிக்காக மாடுகளை விற்கக் கூடாது என்று மத்திய அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. அதற்கு நாடு முழுவதும் பல்வேறு கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன. கேரளாவில் மாட்டுக் கறி திருவிழா நடத்தி, மத்தியில் ஆளும் பாஜக அரசிற்கு எதிர்ப்பு காட்டி வருகின்றனர்.
இதற்கிடையில் கோவையில் எஸ்டிபிஐ கட்சியினர் மாட்டிறைச்சி தடைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தனி மனித உரிமைக்கு எதிரானது என்றும், பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறைகள் நடைபெற்று வருவதாகவும் குற்றம்சாட்டினர். மாட்டிறைச்சியை அனைத்து சமூகத்தினரும் உணவாகப் பயன்படுத்தி வருவதாக சுட்டிக் காட்டினர். மேலும் இதனை தமிழக அரசும் வலியுறுத்த வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர். கோவை ரயில் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட முயன்ற அவர்களை தடுத்து நிறுத்தி, போலீசார் கைது செய்தனர். கேரளாவில் பெரிய அளவில் தொடங்கிய மாட்டிறைச்சிக்கான போராட்டம், தமிழகத்திற்கு நுழைந்துள்ளது.
இது படிப்படியாக பரவி, ஜல்லிக்கட்டு போராட்டம் போல் விஸ்வரூபம் எடுத்து மத்திய அரசுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பும் என்று நம்பப்படுகிறது. அவ்வாறு நடந்தால் 21ஆம் நூற்றாண்டின் வரலாற்றில் இது தமிழர்களின் 2வது எழுச்சி என பதியப்படும் என்பதில் சந்தேகமில்லை. மாட்டிறைச்சி தடைக்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தை முன்னெடுப்பார்களா? அவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் களம் காண்பார்களா? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
SDPI protest against the ban of beef in Coimbatore.