ஆப்நகரம்

கன்னியாகுமரி திருவள்ளுவரின் கதி என்ன?

கன்னியாகுமரி கடல் நடுவே 133 அடி உயர திருவள்ளுவர் சிலை உப்புக்காற்றால் பாதிக்கப்பட்டுவருவதாக கூறப்படுகிறது.

TNN 11 Jul 2016, 11:17 am
கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடல் நடுவே 133 அடி உயர திருவள்ளுவர் சிலை உப்புக்காற்றால் பாதிக்கப்பட்டுவருவதாக கூறப்படுகிறது.
Samayam Tamil sea breeze affects kanyakumari thiruvalluvar statue
கன்னியாகுமரி திருவள்ளுவரின் கதி என்ன?


2000வது ஆண்டில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது. சிலை கடல் நடுவே இருப்பதால், உப்பு காற்றால் சேதம் அடையாமல் இருக்க சிலையின் மேல் சிலிக்கான் ரசாயனக் கலவை பூசப்பட்டது. 3 ஆண்டுக்கு ஒருமுறை சிலை மீது ரசாயன க் கலவை பூசப்பட்டு பராமரிக்கப்படுகிறது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சிலை பராமரிப்பை மேற்கொண்டு வந்தது. ஆனால், குறித்த காலத்திற்குள் ரசாயன கலவை பூசப்படாததால் உப்புக்காற்றால் சிலை சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடைசியாக ரசயானக்கலவை பூசப்பட்டு, இந்த ஆண்டுடன் 3 வருடம் நிறைடைகிறது. இப்போதே, சிலையில் வெடிப்புகள் உருவாகத் தொடங்கிவிட்டது. எனவே, வரும் டிசம்பருக்குள் ரசாயன கலவை பூச வேண்டியது கட்டாயமாகிறது.

ரசாயனம் பூச, சாரம் கட்டும் பணியை இப்போதே தொடங்கினால்தான் குறிப்பிட்ட காலத்திற்குள் அனைத்து பணிகளையும் முடிக்க முடியும் என்று தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை வலியுறுத்துகின்றனர்.

அடுத்த செய்தி