ஆப்நகரம்

கடற்கரையில் பாதுகாப்பாக விடப்பட்ட ஆமை குஞ்சுகள்

பெசன்ட்நகா் கடற்கரையில் பராமாிக்கப்பட்ட ஆமைக்குஞ்சுகள் சுதந்திரமாக விடப்பட்டன.

Samayam Tamil 28 Apr 2018, 11:46 pm
பெசன்ட்நகா் கடற்கரையில் பராமாிக்கப்பட்ட ஆமைக்குஞ்சுகள் சுதந்திரமாக விடப்பட்டன.
Samayam Tamil Turtle 2.


கடல் ஆமைகள் கடற்கரை ஓரங்களில் முட்டைகளை இட்டுச் செல்லும். அவை குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பின்னா் அதில் இருந்து குஞ்சுகள் வெளிவருவது வழக்கமான ஒன்று தான். ஆனால் தற்போது கடற்கரையில் ஆமைக்கள் இட்டுச் செல்லும் முட்டைகள் நாய், உள்ளிட்ட மிருகங்களால் அழிக்கப்படுகின்றன. இதனால் ஆமைக்குஞ்சுகள் அழிந்து விடும் அபாயம் உள்ளது.


இதனை தடுக்கும் விதமாக தன்னாா்வலா்கள் ஆமைகள் இட்டுச் செல்லும் முட்டைகளை பாதுகாப்பாக எடுத்து வந்து அதனை பக்குவப்படுத்துகின்றனா். அவ்வாறு பக்குவப்படுத்தப்படும் முட்டைகள் முறையான காலத்தில் குஞ்சுகளை வழங்குகின்றன. அந்த வகையில் பெசன்ட் நகா் கடற்கரையில் விலங்குகள் நல அமைப்பினா் ஆமை முட்டைகளை சேகரித்து பாதுகாத்தனா்.

அவற்றின் குஞ்சுகள் இன்று பெசன்நகா் கடற்கரையில் சுதந்திரமாக விடப்பட்டன. இதனை சிறுவா்கள், இளைஞா்கள் உள்பட பலரும் வியப்புடன் பாா்த்து மகிழ்ந்தனா்.

அடுத்த செய்தி