ஆப்நகரம்

ஆளுநரின் செயலாளர் திடீர் மாற்றம் : தமிழக அரசு அதிரடி

தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்து வந்த ராஜகோபாலை பணியிட மாற்றம் செய்து, தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Samayam Tamil 19 Nov 2019, 12:06 am
தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்து வந்த ராஜகோபாலை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று (திங்கள்கிழமை) அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil rg


தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் செயலாளராக இருந்த ராஜகோபால், தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்படுகிறார்.

முதல்வர் - ஆளுநர் சந்திப்பு: தமிழக அமைச்சரவையில் மாற்றம்? அமைச்சரவையில் யாருக்கு இடம்?

அதேசமயம், தமிழக ஆளுநரின் புதிய செயலாளராக ஆனந்த ராவ் விஷ்ணு பாட்டீல் நியமிக்கப்பட்டுள்ளார் என, தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் இன்று பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1984 -ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான ராஜகோபால், கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றியுள்ளார்.

7 தமிழர் விடுதலைக்கு ஆளுநர் மறுப்பா: அதிகாரப்பூர்வமாக அறிவிக்க ராமதாஸ் வேண்டுகோள்!!

தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையராக பொறுப்பு வகித்த ஷீலா பிரியா, கடந்த மே மே மாதம் பணி ஓய்வு பெற்றார்.

இதையடுத்து, பல மாதங்களாக காலியாக இருந்த தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு ராஜகோபால் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். மூன்றாண்டுகளுக்கு அவர் இந்த பொறுப்பை வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி