ஆப்நகரம்

ராமநாதபுரத்தில் ஊரடங்கு உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் அடுத்த 2 மாதங்களுக்கு, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

TOI Contributor 9 Sep 2016, 2:37 pm
ராமநாதபுரம் மாவட்டத்தில் அடுத்த 2 மாதங்களுக்கு, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil section 144 imposed in ramanathapuram
ராமநாதபுரத்தில் ஊரடங்கு உத்தரவு


செப்டம்பர் 11ம் தேதி இமானுவேல் சேகரன் நினைவுதினம் வர உள்ளது. அதேபோன்று, அக்டாபர் 30ம் தேதியன்று கமுதி பசும்பொன்னில் தேவர் குரு பூஜை நடைபெற உள்ளது. இதையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் விதமாக, 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் நடராஜன் அறிவித்துள்ளார்.

செப்டம்பர் 8ம் தேதி நள்ளிரவு தொடங்கி, அக்டோபர் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் 9ம் தேதி முதல் 15ம் தேதி வரையும்; அக்டோபர் 25 முதல் 31ம் தேதி வரையும் வெளி மாவட்டங்களில் இருந்து வாடகை வாகனங்களில் ஆட்களை ஏற்றிவரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி