ஆப்நகரம்

வீரசக்கதேவி கோவில் திருவிழா: மே 11 முதல் 14ம் தேதி வரை தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில், வீர சக்கதேவி கோவில் திருவிழா காரணமாக, மே 11ம் தேதி முதலாக, 14ம் தேதி காலை வரையிலும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

TNN 10 May 2017, 5:25 pm
தூத்துக்குடி மாவட்டத்தில், வீர சக்கதேவி கோவில் திருவிழா காரணமாக, மே 11ம் தேதி முதலாக, 14ம் தேதி காலை வரையிலும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil section 144 to be implemented in tuticorin for local temple festival
வீரசக்கதேவி கோவில் திருவிழா: மே 11 முதல் 14ம் தேதி வரை தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு


பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் உள்ள வீரசக்க தேவி கோவில் திருவிழா, வரும் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. திருவிழா அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் வகையில், நாளை (மே 11) மாலை 6 மணி முதல், 14-ஆம் தேதி காலை ஆறு மணி வரை, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது.

இதன்படி, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், தூத்துக்குடி மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் விழாவில் கலந்து கொள்ள வரும் பொதுமக்கள், வாள், கத்தி உள்ளிட்ட அபாயகரமான ஆயுதங்களுடன் ஊர்வலமாக செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாக, திருவிழாவில் கலந்துகொள்ளவும், மக்களை அழைத்து வரவும் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Tamilnadu: Section 144 to be implemented for 3 days in Tuticorin due to local temple festival.

அடுத்த செய்தி