ஆப்நகரம்

நடராஜன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்காத ஈபிஸ்-ஓபிஎஸ்; சீமான் கண்டனம்

சசிகாலவின் கணவர் நடராஜன் மறைவுக்கு பழனிசாமி, பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவிக்காதது பண்பாடற்ற செயல் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 21 Mar 2018, 1:02 pm
சசிகாலவின் கணவர் நடராஜன் மறைவுக்கு பழனிசாமி, பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவிக்காதது பண்பாடற்ற செயல் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil seeman345-02-1504368175


கடந்த 20ம் தேதி சசிகலாவின் கணவர் நடராஜன் காலமானார். அவரது இறப்புக்கு இ.பிஎஸ்.-ஓ.பி.எஸ் அணியை தவிர அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், நடராஜனின் இறப்பு தமிழ் சமூகத்திற்கு மாபெரும் ஈடுகட்ட முடியாத இழப்பு என்றும் அதை விட பெரிய சசிகலாவை பரோலில் வெளி வருவதற்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட கையெழுத்திடாதது என்றார்.

மேலும், எதிர்கட்சியான திமுகவிலிருந்து ஸ்டாலின் கூட நடராஜன் உடலுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார். ஆனால், அரசயிலைத் தாண்டி ஒரு மொழிப் போராட்டவாதிக்கு தமிழக முதல்வர் ஒரு இரங்கலை கூட தெரிவிக்காதது பண்பாடற்ற, நாகரீகமற்ற செயல் என்று கூறினார்.

அடுத்த செய்தி