ஆப்நகரம்

கல்வியைக் காவிமயமாக்கும் பாஜக சதிச்செயலுக்கு அதிமுக அரசு பலி: சீமான் குற்றச்சாட்டு!!

ஈராயிரம் ஆண்டுக்கு முன்பே அறம்பாடிய உலகப்பொதுமறை திருக்குறள் எனும் மானுடச் சாசனம் இருக்க, பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் பகவத் கீதையைச் சேர்ப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துளார்.

Samayam Tamil 25 Sep 2019, 5:44 pm
அண்ணா பல்கலைக்கழக இரண்டாமாண்டு பொறியியல் படிப்பில் தத்துவவியல் பாடத்திட்டத்தில் பகவத்கீதை இடம்பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என்று சீமான் பதிவிட்டுள்ளார்.
Samayam Tamil Seeman 3


சென்னையில் உள்ள MIT, CEG, ACT, SAP வளாகத்தில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இந்தாண்டு முதல் தத்துவவியல் படிப்பும், அதில் பகவத் கீதை பாடமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அகில இந்திய தொழில்நுட்பக் குழும அறிவுறுத்தலின் படி இந்தப் படிப்பு சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பொறியியலில் எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாலும் அதில் மூன்றாவது பருவத்தில் ஆறாவது பாடமாக தத்துவவியல் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் பகவத் கீதை கற்றுத்தரவேண்டும் என பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது விருப்பப் பாடமாக அல்லாமல் கட்டாயப் பாடமாக படிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் தொடங்கிய மூன்றாவது பருவத்திலேயே இந்தப் படிப்பு சேர்க்கப்பட்டுவிட்டது.

இன்ஜினியரிங் படிக்கிறீங்களா.. பகவத் கீதையை எடுத்துட்டு போங்க!

இதற்கு அரசியல் தலைவர்கள் பகிரங்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தனது டிவிட்டர் பதிவில், ''ஈராயிரம் ஆண்டுக்கு முன்பே அறம்பாடிய உலகப்பொதுமறை திருக்குறள் எனும் மானுடச் சாசனம் இருக்க, பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் பகவத் கீதையைச் சேர்ப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

லைசன்ஸ் இருந்தாலும் மீண்டும் 8 போடணுமா.? வாகன ஓட்டிகளுக்கு புதிய அறிவிப்பு.!

அண்ணா பல்கலைக்கழக இரண்டாமாண்டு பொறியியல் படிப்பில் தத்துவவியல் பாடத்திட்டத்தில் பகவத்கீதை இடம்பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. கல்வியைக் காவிமயமாக்கும் பாஜக அரசின் சதிச்செயலுக்கு அதிமுக அரசு பலியாகிவிட்டது என்பதையே இது காட்டுகிறது'' என்று பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி