ஆப்நகரம்

பன்னீர் செல்வம் போல சசிகலா திறமை வாய்ந்தவர் இல்லை - சீமான்

முதலமைச்சர் பன்னீர் செல்வம் போல சசிகலா திறன்பட செயல்பட முடியாது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

TNN 9 Feb 2017, 2:00 am
முதலமைச்சர் பன்னீர் செல்வம் போல சசிகலா திறன்பட செயல்பட முடியாது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil seeman gives supports to chief minister pannerselvam
பன்னீர் செல்வம் போல சசிகலா திறமை வாய்ந்தவர் இல்லை - சீமான்


அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதல்வர் பன்னீர் செல்வம் கருத்து தெரிவித்துள்ள நிலையில், இருவரும் தன் வசம் உள்ள எம்எல்ஏ.,க்களின் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதுவரை 5 அதிமுக எம்எல்ஏ-க்கள் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.



அதில், “முதல்வர் பன்னீர் செல்வத்தைப் போல் சசிகலாவால் திறம்பட செயல்பட முடியாது.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அளித்த விளக்கம் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. ஜெ.,வின் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற பன்னீர் செல்வத்தின் கருத்து காலம் தாழ்த்திய செயல்.” எனவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி