ஆப்நகரம்

ரூ.100 கோடி பெரியார் சிலை; சீமான் ரியாக்‌ஷன் இது தான்!

ரூ.100 கோடியில் பெரியார் சிலை அமைய உள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளிப்படுத்தி உள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 24 Dec 2022, 9:30 pm
திராவிடர் கழகம் சார்பில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் சார்பில் திருச்சி சிறுகனூர் ‘பெரியார் உலகம்’ என்ற தந்தை பெரியாரின் 95 அடி உயர சிலை அமைக்கப்படுவதற்கு தேவைப்படும் தமிழக அரசின் ஆணையை அளித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை முதல்வர் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நன்றி தெரிவித்தார்’ என, குறிப்பிடப்பட்டு இருந்தது.
Samayam Tamil periyar


இதையடுத்து தமிழக அரசின் சார்பிலேயே பெரியாருக்கு 95 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட இருப்பதாக பலரும் தவறாக புரிந்து கொண்டனர். இதை அறிந்த சிலரோ வாழ்த்தினர். இன்னும் சிலர் விமர்சித்தனர்.

குறிப்பாக பெரியாருக்கு சிலை அமைப்பதை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்து இருந்தார். இதன் பிறகு இந்த விவகாரம் குறித்து பெரிய அளவில் கிளம்பாமல் இருந்தது.

பிரதமரையே ஏமாற்றிய எடப்பாடி அரசு?; பகீர் கிளப்பிய கார்த்திகேய சிவசேனாபதி!
இந்நிலையில் பெரியாரின் 49ம் ஆண்டு நினைவு நாளையொட்டி இன்று சென்னையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மலர் வணக்க நிகழ்வு நடைபெற்றது. இதன் பின்னர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

திராவிட கோட்பாடு என்பதை நாங்கள் எதிர்க்கிறோம். திராவிடம் என்பது தமிழர்கள் அல்லாதோர் வசதியாக வாழ்வதற்கும், ஆள்வதற்கும் கொண்டு வரப்பட்ட ஒன்று என்பது புரிந்ததில் இருந்து, எங்கள் இனத்தில் சாவில் இருந்து எங்களுக்கு அறிவு வருகிறது.

இன்று தமிழக அமைச்சரவையில் தெலுங்கை தாய் மொழியாக கொண்ட 9 அமைச்சர்கள் உள்ளனர். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது எங்களுக்கு இந்த முன்னுரிமை, இவ்வளவு பெரிய அங்கீகாரம், இத்தனை பெரிய ஜனநாயகம் கொண்ட ஒரு தேசிய இனத்தை எங்காவது பார்த்தது உண்டா?

யாருக்கு பொங்கல் பரிசு இல்லை?; வெளியான பரபரப்பு தகவல்!
இதையெல்லாம் பார்க்கும்போது இன்னும் விஜயநகர பேரரசு தான் ஆட்சி செய்து வருகிறது என்ற கருத்து தானே வருகிறது. பெரியாருக்கு நூறு கோடி ரூபாயில் சிலை வைப்பது தொடர்பாக கேட்கிறீர்கள்.

பெரியாரின் கருத்தியலை முதலில் மக்களிடம் பரப்ப வேண்டும். அவருடைய கருத்தியலை பரப்ப திராவிடம் என்கிற பெயர் தேவையில்லை. அவருடைய கருத்தியல் நிறைய உள்ளன.

நானே 15 ஆண்டுகள் பேசி உள்ளேன். வல்லபாய் படேலுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாயில் சிலை வைத்ததற்கும் ஐயா பெரியாருக்கு ரூ.100 கோடியில் சிலை வைப்பதற்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்?

தண்ணி காட்டும் ஆசிரியர்கள்.. மாணவர்களுக்கு ஆப்பு; ஜனவரி 1 முதல் அமலாகும் புதிய விதி!
தன் மீது வீசப்பட்ட செருப்புகள், பெயர் வைத்தால் காசு, படம் எடுத்தால் காசு, வீட்டிற்கு சாப்பிட வந்தால் காசு என்று வசூலித்து அவற்றை சேமித்து, பள்ளிக்கூடங்களை கட்டியவர் பெரியார்.

அப்படி சேர்த்த பணத்தில் வந்தது தான் பெரியார் திடல் என்கின்ற அறக்கட்டளை. அத்தகைய எளிய மகனுக்கு நீங்கள் ரூ.100 கோடியில் சிலை வைத்தால் அந்த தடியால் அடித்தே உங்களை கொன்று விடுவார். இவ்வாறு சீமான் கூறினார்.

அடுத்த செய்தி