கமல்ஹாசனின் அரசியல் பயணம் புரட்சிகரமாகவும் வெற்றிப் பயணமாகவும் அமைய வாழ்த்துவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நடிகர் கமல்ஹாசனை இன்று அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுத்த சீமான், “தொடர்ச்சியாக அனைத்து தலைவர்களையும் சந்தித்து வரும் கமல் என்னையும் சந்திக்க வருவதாகச் சொன்னார். அவரை நான்தான் பார்க்க வரவேண்டும் என்று கூறி நானே அவரைச் சந்திக்க வந்துவிட்டேன்” என்றார்.
“தமிழகத்தில் எந்த வகையிலாவது மாற்றம் வராதா என எதிர்பார்க்கிறேன். படிக்கும்போதே கமல்ஹாசனின் ரசிகனாக இருந்தேன். கமலின் பயணம் புரட்சிகரமாகவும் வெற்றிகரமாகவும் அமைய வாழ்த்துகிறேன்.” என்றும் சீமான் தெரிவித்தார்.
“இன்று உலகை இயக்குவதே இரண்டுதான் ஒன்று அரசியல், மற்றொன்று அறிவியல். அறிவியலையும் இன்று அரசியல்தான் முடிவு செய்கிறது. அரசியலில் இல்லாதவன் மனிதனாக இருக்க முடியாது என்று காந்தியே கூறினார். மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை தீர்மானிப்பது அரசியல்தான். அரசியலில் நானும் கமலும் இணைந்து செயல்படுவதை காலம் தான் முடிவு செய்யும்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நடிகர் கமல்ஹாசனை இன்று அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுத்த சீமான், “தொடர்ச்சியாக அனைத்து தலைவர்களையும் சந்தித்து வரும் கமல் என்னையும் சந்திக்க வருவதாகச் சொன்னார். அவரை நான்தான் பார்க்க வரவேண்டும் என்று கூறி நானே அவரைச் சந்திக்க வந்துவிட்டேன்” என்றார்.
“தமிழகத்தில் எந்த வகையிலாவது மாற்றம் வராதா என எதிர்பார்க்கிறேன். படிக்கும்போதே கமல்ஹாசனின் ரசிகனாக இருந்தேன். கமலின் பயணம் புரட்சிகரமாகவும் வெற்றிகரமாகவும் அமைய வாழ்த்துகிறேன்.” என்றும் சீமான் தெரிவித்தார்.
“இன்று உலகை இயக்குவதே இரண்டுதான் ஒன்று அரசியல், மற்றொன்று அறிவியல். அறிவியலையும் இன்று அரசியல்தான் முடிவு செய்கிறது. அரசியலில் இல்லாதவன் மனிதனாக இருக்க முடியாது என்று காந்தியே கூறினார். மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை தீர்மானிப்பது அரசியல்தான். அரசியலில் நானும் கமலும் இணைந்து செயல்படுவதை காலம் தான் முடிவு செய்யும்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.