ஆப்நகரம்

'பிரபாகரனின் தாடை என் தோளில்'- அப்துல் ஜப்பார் மறைவுக்கு சீமான் இரங்கல்

பிரபாகரனின் நன்மதிப்பை பெற்ற மூத்த ஊடகவியாளர் அப்துல் ஜப்பார் மறைவுற்றாலும் காலம் கடந்தும் மக்கள் மனங்களில் நிலைத்திருப்பார் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 22 Dec 2020, 6:05 pm
உலகத் தமிழர்களால் நன்கறியப்பட்ட வானொலி அறிவிப்பாளரும், மூத்த ஊடகவியாளருமான அப்துல் ஜப்பார் மறைந்த செய்தியறிந்த பேரதிர்ச்சி அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஊடகதாரருக்கும் எனது ஆறுதலை தெரிவித்து அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன் என சீமான் கூறியுள்ளார்.
Samayam Tamil abdul jabbar death


அதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் தமிழ்தேசியத் தலைவர் பிரபாகரனின் அன்பையும், நன்மதிப்பையும் பெற்றவராவார். கிளிநொச்சி சர்வதேச பத்திரிகையாளர் மாநாடு முடிந்த பின்னர், தலைவர் பிரபாகரனின் தனிப்பட்ட முறையில் விரும்பிச் சந்தித்த ஊடகவியாளர் ஜப்பார்.

'அழைத்தார் பிரபாகரன்' எனும் நூலாக எழுதிய ஜப்பார், '' குழந்தையைப் போல ஓடிச்சென்று கட்டிப்பிடிக்க ஆசை, ஆனால் ஆயுதமேந்திய அந்த இளைஞர்கள் ஒரு கணம் என் எண்ணத்தில் மின்னி மறைந்தனர். என்னையும், எனது எண்ணத்தையும் கட்டுப்படுத்தி கொண்டு சிலையாக நின்றேன். என்னை நெருங்க, நெருங்க அவருடைய நடையின் வேகம் கூடுகிறது.

தமிழகத்தில் பணப்பட்டுவாடாவை தடுப்பது மக்களின் பொறுப்பு - இந்திய தேர்தல் ஆணையம்

நெருங்கி வந்து அப்படியே கட்டிப்பிடித்து ஆலிங்கனம் செய்கிறார். அவரது தாடை என் தோளில், இன்னும் பிடி இருகுகிறது'' . என நெகிழ்ந்து பதிவு செய்திருக்கிறார். அவரது, எழுத்துக்குப் பெரும் ரசிகன் எனத் தலைவரே மனம் திறந்து பாட்டுரைக்கும் அளவுக்கு, தலைவரது உள்ளத்துக்கு நெருக்கமாகத் திகழ்ந்தார்.

ஜப்பார் வானொலி அறிவிப்பாளராக மட்டுமல்லாது பெரும் எழுத்தாளராகவும் திகழ்ந்த ஜப்பார் பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார். ஊடகத்தளத்திற்கு அவர் ஆற்றிய அரிய பல பங்களிப்புக்காக எண்ணற்ற விருதுகளையும் வாங்கி குவித்திருக்கிறார். அவரது மறைவு உலக தமிழர்களிடையே பெருந்துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழுக்கு தொண்டு செய்தோர் காலத்தால் அழிவதில்லை எனும் முதுமுழிக்கேற்ப, வாழ்ந்து மறைந்த அப்துல் ஜப்பார் இம்மண்ணை விட்டு நீக்கினாலும் தமிழர்களின் நெஞ்சைவிட்டு ஒருநாளும் அகலப்போவதில்லை. தலைமுறைகள் பல கடந்தும் மக்கள் மனங்களில் நிலைத்திருப்பார்'' என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி