ஆப்நகரம்

காவலர்களுக்கும் சிறப்பு ஊதியம் கொடுங்க: சீமான்

கடும் நெருக்கடியான சுகாதாரச் சூழல் இருக்கும் இந்த சமயத்தில் பொது இடங்களில் வேலை செய்யும் பணியாளர்களுக்கும் ஊதிய உயர்வு என்பது வரவேற்கத்தக்கது.

Samayam Tamil 27 Mar 2020, 5:07 pm
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அச்சமூட்டும் வகையில் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் சரி, தமிழகத்திலும் சரி எண்ணிக்கை அதிகரிக்கும் விகிதம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஏப்ரல் 14 வரையிலாக, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டு நாடெங்கும் காவல்துறையினரின் தீவிரமான கண்காணிப்பின் கீழ் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
Samayam Tamil seeman


மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர் என்றபோதும் இதனைக் கண்காணிப்பதற்காக நாடு முழுக்க இருக்கும் காவலர்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியே வந்து பணிபுரிந்துகொண்டிருக்கிறார்கள். அதே போல அம்மா உணவகங்கள், நியாய விலைக்கடைகள் உள்ளிட்ட இடங்களில் பணிபுரிவோரும் ஆபத்தான சூழலில் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இதுபோன்ற பணியாளர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்கக் கோரி ட்வீட் ஒன்றூ வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “உரிய பாதுகாப்பு அணிகலன்கள் இல்லாதபோதிலும் தொடர் மக்கள்பணியில் ஈடுபட்டுவரும் காவல்துறையினர், அங்கன்வாடி, அம்மா உணவக, நியாயவிலை கடை ஊழியர்கள் போற்றப்படவேண்டியவர்கள்.

வடிவேலு சொன்னது அப்ப புரியல கொரோனா வந்தப்ப தான் புரியுது

மற்ற சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு வழங்கியதைப்போல இவர்களுக்கும் ஒருமாத சிறப்பு ஊதியம் வழங்கவேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.” என்று தெரிவித்திருந்தார்.


கடும் நெருக்கடியான சுகாதாரச் சூழல் இருக்கும் இந்த சமயத்தில் பொது இடங்களில் வேலை செய்யும் பணியாளர்களுக்கும் ஊதிய உயர்வு என்பது வரவேற்கத்தக்கது.

அடுத்த செய்தி