ஆப்நகரம்

சேகர் ரெட்டி உள்ளிட 3 பேருக்கு ஜாமீன் வழங்கியது சிபிஐ நீதிமன்றம்

சட்டவிரோதமாக பணம் பரிமாற்ற முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சேகர் ரெட்டி உள்ளிட்ட மூன்று பேருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது.

TNN 17 Mar 2017, 6:56 pm
சென்னை: சட்டவிரோதமாக பணம் பரிமாற்ற முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சேகர் ரெட்டி உள்ளிட்ட மூன்று பேருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது.
Samayam Tamil sekar reddy and three others gets conditional bail
சேகர் ரெட்டி உள்ளிட 3 பேருக்கு ஜாமீன் வழங்கியது சிபிஐ நீதிமன்றம்


புதிய 2000 ரூபாய் நோட்டுகளை சட்டவிரோதமாக மாற்ற முயன்றதாக சேகர் ரெட்டி, பிரேம்குமார், சீனிவாசலு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 88 நாட்கள் ஆகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யதது என்று இந்த மூவர் தரப்பிலும் மனு அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, சேகர் ரெட்டி, பிரேம்குமார், சீனிவாசலு ஆகிய மூவரையும் நிபந்தனை ஜாமீனில் விடுவிப்பதாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. அவர்கள் மூவரும் தங்கள் பாஸ்போட்டுக்களை சிபிஐ அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் வெளிநாடுகளுக்குச் செல்லகூடாது என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், தினமும் காலை 10.30 மணிக்கு சிபிஐ சிறப்பு நீதிபதி முன்பு ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என்றும் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி