ஆப்நகரம்

சேகர் ரெட்டியின் வங்கி லாக்கருக்கு சீல் வைத்த ஐ.டி அதிகாரிகள்

சேகர் ரெட்டியின் வங்கி லாக்கருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளது.

TNN 26 Dec 2016, 1:37 pm
சென்னை : சேகர் ரெட்டியின் வங்கி லாக்கருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளது.
Samayam Tamil sekar reddy bank locker sealed
சேகர் ரெட்டியின் வங்கி லாக்கருக்கு சீல் வைத்த ஐ.டி அதிகாரிகள்


தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீட்டிலும் அலுவலகத்திலும் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் 131 கோடி ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 170 கிலோ தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் 30 கோடி ரூபாய் புதிய 2000 ரூபாய் நோட்டுகளில் உள்ளது. இதனையடுத்து, காவல்துறையினர் சேகர் ரெட்டியையும் அவரது நண்பர் சீனிவாசலுவையும் கைது செய்தனர்.

இந்தநிலை சேகர் ரெட்டியிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், அவரிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தமிழகத்தின் முக்கிய புள்ளிகளின் வீடுகளிலும் போலீசார் சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

காட்பாடியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் சேகர் ரெட்டி லாக்கர் வசதி பயனபடுத்தி வந்ததை வருமான வரித்துறையினர் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.இந்த லாக்கரில் சட்ட விரோதாமாக சம்பதித்த பணங்கள் மற்றும் சொத்தின் ஆவணங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அந்த லாக்கரை வருமானவரித்துறையினர் சீல் வைத்தாக தகவலகள் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி