ஆப்நகரம்

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு: சேகர் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன்!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட, சேகர் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

TNN 12 May 2017, 4:46 pm
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட, சேகர் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil sekar reddy released in conditional bail
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு: சேகர் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன்!


ஏற்கனவே கடந்த மார்ச் 17ம் தேதியன்று சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகிய 3 பேருக்கு, நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. தற்போது, 2வது முறையாக சேகர் ரெட்டிக்கு மீண்டும் ஜாமீன் கிடைத்துள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய அரசியல்வாதிகளின் கூட்டாளியான சேகர் ரெட்டி மற்றும் பிரேம்குமார், சீனிவாசலு, திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோர் கடந்த ஆண்டில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த புகாரில் கைது செய்யப்பட்டனர். சேகர் ரெட்டியின் வீட்டில் இருந்து, கணக்கில் வராத ரூ.147 கோடி மதிப்பிலான ரொக்கப் பணமும், 178 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சிபிஐ, வருமான வரித்துறை அதிகாரிகளின் விசாரணை வளையத்தில் இவர்கள் உள்ளனர். இந்நிலையில், நிபந்தனை ஜாமீன் கோரி, சேகர் ரெட்டி, அவரது கூட்டாளிகள் திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதையேற்று, சேகர் ரெட்டிக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிபதி, அவரது கூட்டாளிகள் திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.

Tamilnadu: Sekar Reddy released in conditional bail

அடுத்த செய்தி