ஆப்நகரம்

காவிரி விவகாரத்தில் மக்களை ஏமாற்றுவது யார் என்று உங்களுக்கு தெரியும் - செல்லூர் ராஜூ

காவிரி விவகாரத்தில் யார் அதை வைத்து அரசியல் செய்கின்றனர் என மக்களுக்கு நன்றாக தெரியும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 8 Apr 2018, 3:28 pm
மதுரை : காவிரி விவகாரத்தில் யார் அதை வைத்து அரசியல் செய்கின்றனர் என மக்களுக்கு நன்றாக தெரியும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
Samayam Tamil sellur raju


மதுரை விளாங்குடியில் ரூ. 42 லட்சம் செலவில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதை திறந்துவைத்து அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

அதில், “மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில், தற்போதுள்ள எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி செய்து வருகின்றார். மக்களின் உரிமையை கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல் போராடி வருகின்றார். அவருக்கு மக்கள் ஆதரவு வழங்கி வருகின்றனர்.

ஆனால் அவரின் பெருமையை சிதைக்கும் வண்ணம் சிலர் செயல்பட்டு வருகின்றனர்.

காவிரி நதி நீர் பிரச்னை தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தத்தை கொடுத்து வருகின்றது. ஆனால் முன்பு ஆட்சி செய்த திமுக மத்திய அரசுடன் கூட்டணியில் இடம்பெற்றிருந்த போதும் அதற்கான எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

மக்களுக்கு யார் துரோகம் செய்தது,யார் ஏமாற்றியது என மக்களுக்கு நன்றாக தெரியும். அதனால் அவர்களை ஏமாற்ற வேண்டாம்.” என தெரிவித்தார்.

அடுத்த செய்தி