ஆப்நகரம்

'என் சமூகத்து ஆளுன்னு சொல்லல'.. அவர் மிக சிறந்த நிர்வாகி - செல்லூர் ராஜு

நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள தங்கம் தென்னரசு மிக சிறந்த நிர்வாகி என்று அதிமுக செல்லூர் ராஜு பேட்டி அளித்துள்ளார்.

Authored byதிவாகர் மேத்யூ | Samayam Tamil 12 May 2023, 5:34 pm
இரண்டாண்டு காலம் ஆட்சிக்கு பின்னர் திமுக அமைச்சரவையில் மிக முக்கிய மாற்றங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார். மூன்று அமைச்சர்களுக்கு இலாகா மாற்றப்பட்டு ஒரு அமைச்சருக்கு பதவி பறிக்கப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். புதிய அமைச்சராக நுழைந்துள்ள டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை வழங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil thangam thennarasu


இதில் மிக முக்கியமாக அமைச்சர் பிடிஆர் பார்த்து வந்த நிதித்துறை அமைச்சர் தென்னரசுவுக்கு வழங்கப்பட்டிருப்பது வியப்பாக பார்க்கப்படுகிறது. அமைச்சர் தென்னரசுவுக்கு நல்ல நிர்வாக அனுபவம் இருந்தாலும் நிதி நிர்வாக துறையில் நாடளவில் கவனம் பெற்று வந்த அமைச்சர் பிடிஆருக்கு திடீரெனெ வேறு துறை வழங்கப்பட்டிருப்பது பலரால் எளிதாக கடந்து செல்ல முடியவில்லை.

மேலும், நிதி ஒதுக்குவதில் கண்டிப்புடன் இருந்து வருவதாக பிடிஆர் மீது சக அமைச்சர்கள் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் உலா வந்தன. இதற்கு மத்தியில் அமைச்சர் பிடிஆர் பேசியதான ஆடியோவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இது திமுக அரசுக்கு சிக்கலான சூழலை ஏற்படுத்தியது. இதற்கு மத்தியில்தான் பிடிஆரிடம் இருந்து நிதி துறை பறிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய செல்லூர் ராஜு அமைச்சர் தென்னரசு மிக சிறந்த நிர்வாகி.. மிக சிறந்த ஆற்றலாளர் அவர். அதில் மாற்று கருத்து இல்லை. அவர் எனது சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் நான் இல்லை சொல்லவில்லை. அமைச்சர் தென்னரசுவுக்கு எந்த துறையை கொடுத்தாலும் அதில் முத்திரையை பதிக்கக்கூடியவர்.

அது எனக்கு நன்றாகவே தெரியும். மாற்று கட்சியில் இருந்தாலும்கூட நான் இதை சொல்கிறேன். திமுக அமைச்சர்களிலேயே மற்றவர்களை போல இல்லாமல் யாரையும் குற்றம், குறை சொல்லாத மனிதர். தனது கருத்துக்களை வலுவாக சொல்லக்கூடியவர் அவர். ஆளுகட்சியின் ஆதாரங்களையும், அதிகாரங்களையும் எடுத்துசொல்லக்கூடியவர் அவர். யார் மனதையும் புண்படுத்தாமல் செயல்படுவார். அவர் கையில் நிதித்துறை சென்றிருப்பது உண்மையிலேயே பாராட்டுக்குரியது என செல்லூர் ராஜு புகழ்ந்து பேசினார்.
எழுத்தாளர் பற்றி
திவாகர் மேத்யூ
திவாகர். நான் தொலைக்காட்சி, நியூஸ் ஆப், செய்தி இணைதளம் என ஊடக துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறேன். எழுத்தின் மீதான ஆர்வமும் ஊடகத்தின் மீது இருக்கும் பற்றால் இத்துறையை தேர்வு செய்துள்ளேன். அரசியல், குற்றம், அரசியல் - குற்றம் சார்ந்த அலசல், அரசு சார்ந்த செய்திகளை எவ்வித சமரசமும் இல்லாமல் எழுதி வருகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக TIMES Of INDIA சமயம் தமிழில் Senoir Digital Content Producer ஆக பணியாற்றுகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி