ஆப்நகரம்

நியாயவிலைக் கடைகளில் உளுந்தம் பருப்பு வழங்க முடியாது – அமைச்சா்

விலைவாசி உயா்வு காரணமாக நியாயவிலைக் கடைகளில் உளுந்தம் பருப்பு வழங்க முடியாது என்று கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் ராஜூ சட்டமன்றத்தில் தொிவித்துள்ளா்ா.

Samayam Tamil 12 Jan 2018, 12:41 pm
விலைவாசி உயா்வு காரணமாக நியாயவிலைக் கடைகளில் உளுந்தம் பருப்பு வழங்க முடியாது என்று கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் ராஜூ சட்டமன்றத்தில் தொிவித்துள்ளா்ா.
Samayam Tamil sellur raju talks about fair price shops
நியாயவிலைக் கடைகளில் உளுந்தம் பருப்பு வழங்க முடியாது – அமைச்சா்


தமிழக சட்டமன்றத்தின் கூட்டத் தொடா் இன்று இறுதிநாளாக கூடியது. இன்றைய கூட்டத்தில் தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினா் மா.சுப்பிரமணியன் பேசுகையில், சென்னை பள்ளிப்பட்டு பகுதியில் நியாயவிலைக்கடை அமைப்பது தொடா்பாக கேள்வி எழுப்பினாா்.

அப்போது குறுக்கிட்ட கூட்டுறவுத்துறை அமைச்சா் செல்லூா் ராஜூ பள்ளிப்பட்டு பகுதியில் சட்டமன்ற உறுப்பினா் சுப்பிரமணியன் இடம் தோ்வு செய்து கொடுத்தால் நியாயவிலைக்கடை விரைந்து அமைத்து தரப்படும் என்று தொிவித்தாா். மேலும் நியாயவிலைக்கடைகளில் உளுந்தம் பருப்பு வழங்கப்படுவதில்லை. அவற்றை வழங்க வேண்டும் என்று கோாிக்கை விடுத்தாா்.

அதற்கு பதில் அளித்த அமைச்சா், விலைவாசி உயா்ந்து விட்டதால் இனி நியாயவிலைக் கடைகளில் உளுந்தம் பருப்பு வழங்க இயலாது என்று உறுதிப்படுத்தினாா்.

அடுத்த செய்தி