ஆப்நகரம்

ஆட்சியை அண்ணன் கையில் கொடுங்க: செம்மலை வக்காலத்து

ஆட்சியையும் கட்சியையும் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்தால் அதிமுக அணிகள் இணைவது சாத்தியப்படும் என்று ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர் செம்மலை தெரிவித்துள்ளார்.

TNN 29 May 2017, 9:30 am
சேலம்: ஆட்சியையும் கட்சியையும் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்தால் அதிமுக அணிகள் இணைவது சாத்தியப்படும் என்று ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர் செம்மலை தெரிவித்துள்ளார்.
Samayam Tamil semmalai wants o panneerselvam to lead aiadmk
ஆட்சியை அண்ணன் கையில் கொடுங்க: செம்மலை வக்காலத்து


அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர் செம்மலை எம்.எல்.ஏ. சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் அதிமுக அணிகள் இணைய வேண்டுமானால் தலைமைப் பொறுப்பு ஓபிஎஸ் வசம் வரவேண்டும் என்றார்.

ஆட்சிக்கும் கட்சிக்கும் தலைமையேற்று வழிநடத்திச் செல்லும் பொறுப்பு ஓ.பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்பட்டால் இரு அணிகளும் இணைய சாத்தியம் இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ள எம்எல்ஏக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஓபிஎஸ் தலைமையையே விரும்பிகின்றனர். என்றும் அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி