ஆப்நகரம்

சசிகலாவுடன் சண்டையை ஆரம்பித்த செங்கோட்டையன்

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த செங்கோட்டையன், தற்போது தான் கேட்கும் இலாகா தான் வேண்டும் என சசிகலாவுடன் சண்டையிட ஆரம்பித்துள்ளாராம்.

TNN 9 Jan 2017, 7:32 pm
சென்னை : அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த செங்கோட்டையன், தற்போது தான் கேட்கும் இலாகா தான் வேண்டும் என சசிகலாவுடன் சண்டையிட ஆரம்பித்துள்ளாராம்.
Samayam Tamil sengottaiyan demands transport minister post
சசிகலாவுடன் சண்டையை ஆரம்பித்த செங்கோட்டையன்


ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுக., பொதுச்செயலராக சசிகலா தேர்ந்தெடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களின் ஒருவர் செங்கோட்டையன். இதற்காக எம்எல்ஏ.,களிடம் பேச்சுவார்த்தையும் நடத்தினார். அதன் பின் அமைச்சர் பதவி தருவதாக கூறி சசிகலா தரப்பு கூறியதும் அமைதியானார். அதன் பின் போயஸ் கார்டனுக்கு சென்று சசிகலா பொதுச்செயலர் ஆவதற்கு ஆதரவு தெரிவித்தார்.



தற்போது பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றியிருக்கும் சசிகலா தலைமையில் எம்.எல்.ஏ பட்டியல் தயாரித்து கொண்டிருக்கிறது. இதில் செங்கோட்டையனுக்கு கதர் அல்லது உணவுத்துறை இலாகா கொடுக்கப்படலாம் என குறிப்பிடப்படிருந்தது.

ஆனால் தற்போது போக்குவரத்து துறை அல்லது உள்ளாட்சித்துறை தான் வேண்டும் என மீண்டும் போர்க்கொடி தூக்கியிருக்கிறாராம் செங்கோட்டையன். இதனால் மீண்டும் பீதியில் இருக்கிறதாம் போயஸ் கார்டன்.

அடுத்த செய்தி