ஆப்நகரம்

பொதுத் தேர்வு கட்டாயம்: அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

நடப்பு கல்வியாண்டில் பொதுத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 28 Dec 2020, 2:45 pm
கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் ஒன்பது மாதங்களாக மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலமாக மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன.
Samayam Tamil tn public exam


வகுப்பில் கல்வி கற்பது போன்ற சூழல் இதில் இல்லை. அனைவருக்கு ஸ்மார்ட்போன் வசதி இல்லை, நெட்வொர்க் பிரச்சினை ஆகியவை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இந்நிலையில் அரசு பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை அரசு ரத்து செய்து உத்தரவிட்டது. தனியார் பள்ளிகளில் இந்தத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

பொங்கல் பரிசு வழங்குவதில் அதிமுகவினர் செய்யும் காரியம்!

பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு வராத நிலையில், ஏற்கெனவே காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்து அனைவரும் ஆல் பாஸ் என அறிவித்தது போல் இந்த ஆண்டும் அமைய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

அதிமுகவில் மீண்டும் விரிசல்? இரட்டை இலையைக் காட்டி நடக்கும் பேரம்!

இந்நிலையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இது குறித்துப் பேசியுள்ளார். “நடப்பு கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத் தேர்வு நடத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி