ஆப்நகரம்

சுடுகாட்டில் கூட படுக்கலாம் ஆனா இந்த சுதந்திர நாட்டில் படுக்க பயமாக உள்ளது: சகாயம்!

எனக்கு சுடுகாட்டில் படுக்க கூட பயமில்லை ஆனால் இந்த சுதந்திர நாட்டில் இருக்க பயமாக உள்ளது என சகாயம் ஐ.ஏ.எஸ்., தெரிவித்துள்ளார்.

TOI Contributor 10 Jun 2017, 10:13 pm
சென்னை: எனக்கு சுடுகாட்டில் படுக்க கூட பயமில்லை ஆனால் இந்த சுதந்திர நாட்டில் இருக்க பயமாக உள்ளது என சகாயம் ஐ.ஏ.எஸ்., தெரிவித்துள்ளார்.
Samayam Tamil senior ias officer sagayam has said there is no fear in stay at cemetery ground
சுடுகாட்டில் கூட படுக்கலாம் ஆனா இந்த சுதந்திர நாட்டில் படுக்க பயமாக உள்ளது: சகாயம்!


சென்னை தி.நகர் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. இதில் பங்கேற்ற சகாயம் ஐஏஎஸ் கூறுகையில்,’ லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர் என திரும்பத் திரும்ப சொல்வதால் தான் 26 வருடங்களில் 24 இடங்களுக்கு மாற்றப்பட்டேன். அதுக்காக என் கொள்கையில் நான் ஒருபோதும் தளர்ந்தது இல்லை.

நான் மதுரை ஆட்சியராக இருந்த போது எனக்கு 200 கோடி ரூபாய் லஞ்சம் தர உள்ளதாக தகவல் வந்தது. தற்போதை சூழலில் எனக்கு சுடுகாட்டில் படுக்க கூட பயமில்லை ஆனால் இந்த சுதந்திர நாட்டில் இருக்க பயமாக உள்ளது. ​ ’என்றார்.

மதுரையில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக சகாயம் குழு விசாரணை நடத்திய போது, நரபலி கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. சுடுகாட்டில் சடலத்தை தோண்டி எடுக்க போலீசார் ஒத்துப்பு தரவில்லை. அசராத சகாயம் குழுவினர் புகாரில் குறிப்பிட்ட இடத்தை தோண்டி எடுத்து, உடலை ஆய்வு செய்த பின்னரே செல்வோம் என கூறி சுடுகாட்டிலேயே முகாமிட்டு தங்கியிருந்ததார்.

Senior IAS officer Sagayam has said, There is no fear in stay at Cemetery ground.

அடுத்த செய்தி