ஆப்நகரம்

பிரபல எழுத்தாளர் ஞானி காலமானார்!

பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஞானி சங்கரன் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்.

Samayam Tamil 15 Jan 2018, 3:38 pm
Samayam Tamil senior journalist gnani sankaran passed away
பிரபல எழுத்தாளர் ஞானி காலமானார்!
பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஞாநி சங்கரன் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்.

எழுத்தாளர், பத்திரிகையாளர், நாடக ஆசிரயர் என்று பன்முகத்தன்மை கொண்டவரும், ஆங்கில இதழாளர் வேம்புசாமியின் மகனுமானவர் ஞாநி சங்கரன்.

மூத்த எழுத்தாளரான ஞாநி, கடந்த சில வருடங்களாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இருந்தபோதிலும், நிகழ்கால அரசியலை குறித்து பல்வேறு ஊடகங்களில் பேசி வந்தார்.

இந்நிலையில், இன்று காலை ஞாநிக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கு கொண்டு போது, செல்லும் வழியிலேயே காலமானார்.

ஞாநியின் மறைவுக்கு, மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஞாநியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை கே.கே நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இவரது உடல் சென்னை ராஜீ்வ் காந்தி அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்படுகிறது.

அடுத்த செய்தி