ஆப்நகரம்

செந்தில் பாலாஜி போட்டியிடத் தடையில்லை: நீதிமன்றம்

அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி போட்டியிடத் தடை கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

TNN 28 Oct 2016, 5:53 pm
டெல்லி: அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி போட்டியிடத் தடை கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil senthil balaji by election case sc cancel the plea
செந்தில் பாலாஜி போட்டியிடத் தடையில்லை: நீதிமன்றம்


தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் நவம்பர் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

செந்தில் பாலாகி மீது பல்வேறு புகார்கள் இருப்பதால், அவர் அந்த தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கக்கோரி ஜெயராஜ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் செந்தில் பாலாஜிக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

இதனையடுத்து ஜெயராஜ், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அவர் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை. மேலும் செந்தில் பாலாஜி இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி