ஆப்நகரம்

தமிழகத்தில் போக்ஸோ நீதிமன்றம்..! மூன்று மாவட்டங்களில் அமைக்க உத்தரவு..

பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல்களை குறித்து கையாளப்படும் போக்ஸோ சட்டத்திற்கென, தனி நீதிமன்றங்கள் தமிழ்நாட்டின் மூன்று மாவட்டங்களில் அமைக்கப்படவுள்ளது.

Samayam Tamil 5 Sep 2019, 1:29 pm
நாட்டில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் வன்முறைகளை ஏற்படுத்துபவர்கள் மீது தண்டனையை உயர்த்தும் வகையில் 2012 -ல் போக்ஸோ சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து இதற்கென தனி நீதிமன்றங்களை அமைக்க உச்சநீதிமன்ற தலைமை பரிந்துரை செய்தது.
Samayam Tamil 13


குரங்கணி வனப்பகுதியில் மீண்டும் மலையேற்றம் செல்ல அனுமதி!

இந்நிலையில் வழக்குகளின் அடிப்படையில் மாவட்டங்களை தேர்வு செய்து சென்னை. காஞ்சிபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களில் போக்ஸோ வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் தற்போது அமைக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை வழக்குகள் ஏற்கெனவே நிலுவையில் உள்ளதால் பெண் குழந்தைகளுக்கான போக்ஸோ வழக்குகளை விரைவாக கையாள தாமதமாகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

அரசுப் பள்ளியில் இவ்வளவு அலட்சியமா? மின்சாரம் தாக்கி 8ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!

போக்ஸோ சட்டத்தை பொறுத்தவரையில் ஒவ்வொரு வழக்குகளையும் நிலைமையை கொண்டு அவசர வழக்காக கருதி விசாரணையை விரைந்து முடிக்க அனைத்து கிளை நீதிமன்றத்திற்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த வழக்குகளும் நிலுவைக்குச் செல்வதால் வழக்குகளின் மீதான தீர்ப்பு விரைவில் சாத்தியமில்லை.

மைனர் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு; கொடுமை செய்த இளைஞன்- துணை போன தாய்!

தற்போது முக்கிய இம்மூன்று மாவட்டங்களில் அமைக்கவுள்ள நீதிமன்றங்களால் நிலுவையில் உள்ள வழக்குகள் உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும்.

அடுத்த செய்தி