ஆப்நகரம்

செப்டம்பர் 21: குறைய தொடங்கிய கொரோனா..! கட்டுக்குள் வரும் உயிரிழப்புகள்

செப்டம்பர் 21: குறைய தொடங்கிய கொரோனா..! கட்டுக்குள் வரும் உயிரிழப்புகள்

Samayam Tamil 21 Sep 2021, 9:38 pm
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,647 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,48,688 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் தற்போது 16,993 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Samayam Tamil representative image


சென்னையில் மட்டும் இன்று 198 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 548097 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 537592 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 8450 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் இன்று 218 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 240679 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 236193 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2319
பேர் பலியாகியுள்ளனர்.

செங்கல்பட்டில் இன்று 109 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,67,747 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,64,059 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2,459
பேர் பலியாகியுள்ளனர்.

தேர்தலில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு... கனிமொழி்க்கு காய்தரி ரகுராம் 'நச்' கேள்வி!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,49,619 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 4,47,00,788 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இன்று 1,619 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 25,96,316 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 19 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 35,379 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த செய்தி