ஆப்நகரம்

தமிழகத்தில் புதிதாக ஏழு கல்லூரிகள்... அதுவும் இந்த வருஷமே அட்மிஷன்!!

தமிழகத்தில் புதிதாக ஏழு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அத்துடன் இக்கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டிலேயே மாணவர் சேர்க்கையை நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 12 Sep 2020, 10:58 pm
பொறியியல் பட்டப்படிப்புகள் மீதான மவுசு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வரும் அதே வேளையில், கலை -அறிவியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் மத்தியில் மதிப்பு கூடிக்கொண்டே வருகிறது. இதனை கருத்தில்கொண்டு, தமிழகத்தில் புதிதாக ஏழு கலை -அறிவியல் கல்லூரிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
Samayam Tamil colleges


இதுதொடர்பாக, கல்லூரிக் கல்வி இயக்குநர் மண்டல கல்லூரிக் கல்வி இயக்குநர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், " விருதுநகர், கோவை, கரூர், , விழுப்புரம், ராணிப்பேட்டை, அரியலூர், நாகை ஆகிய ஏழு மாவட்டங்களில் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன.

இவற்றில் கோவை மாவட்டம், புலியகுளம் பகுதியில் அரசு மகளிர் கல்லூரியும், குறிப்பிட்ட பிற ஆறு மாவட்டங்களில் இருபாலர் அரசு கலை -அறிவியல் கல்லூரிரள் தொடங்கவும் அனுமதி வழங்கப்படுகிறது.

அக்டோபரில் பள்ளிகள் திறப்பா? -அமைச்சர் சொல்வது இதுதான்!

இந்த கல்லூரிகளில், நடப்பு கல்வியாண்டிலேயே (2020 -21) மாணவர் சேர்க்கையை நடத்தவும் ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இந்த கல்லூரிகளில் பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், ஆங்கில வழியில் பி.காம். பி.எஸ்சி. கணிதம், பி.எஸ்சி. கணினி அறிவியல் ஆகிய 5 பாடப்பிரிவுகள் ஆரம்பிக்கப்பட உள்ளன" என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி