ஆப்நகரம்

ஓ...மீன் பிடிக்கிற படகுல இதையெல்லாம் கொண்டு வர ஆராம்பிச்சிட்டாங்களா!

ராமநாதபுரம் அருகே படகில் கடத்தி கொண்டு வரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்துள்ள போலீஸார், அதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 22 Sep 2019, 7:38 pm
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது வேதாளை மீனவ கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட நபரின் படகில் தங்கம் கடத்தி வரப்படுவதாக, நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு இன்று அதிகாலை ரகசிய தகவல் கிடைத்தது.
Samayam Tamil sgs


உடனே, கடலில் மீன் பிடித்துவிட்டு கரை திரும்பிய படகுகளில் போலீஸார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, குறிப்பிட்ட ஒரு படகில், 2.45 கோடி ரூபாய் மதிப்பிலான 7 கிலோ தங்கம் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இலங்கையிலிருந்து தங்கம் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து 7 கிலோ கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளிலிருந்து விமானத்தில் சென்னைக்கு வரும் பயணிகளில் சிலர், பல்வேறு நூதன முறையில் தங்கம் கடத்தி வருவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்,
இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து, ராமநாதபுரம் போன்ற கடலோர மாவட்டங்களுக்கு தங்கம் கடத்தி வரப்படுவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி