ஆப்நகரம்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 7,000 பேர் பாதிப்பு.!

தமிழகம் முழுவதும், ஒரு மாதத்தில், 7,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

TNN 23 Nov 2017, 11:36 am
தமிழகம் முழுவதும், ஒரு மாதத்தில், 7,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
Samayam Tamil seven thousand people are affected by dengue fever in tamilnadu
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 7,000 பேர் பாதிப்பு.!


தீவிரமான டெங்கு;
நாடு முழுவதும், டெங்கு காய்ச்சல் தாக்கம் அதிகரித்து வருகிறது. மத்திய அரசு அறிவிப்பின்படி, ஏழு ஆண்டுகளாக இல்லாத வகையில், இந்தாண்டு நாடு முழுவதும், 1.40 லட்சம் பேர் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டு உள்ளனர்; 216 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெங்கு உயிரிழப்புகள்;
அதிகபட்சமாக தமிழகத்தில், 20 ஆயிரத்து, 141 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 52 பேர் உயிரிழந்துள்னர். கேரளாவில், 19 ஆயிரத்து, 543 பேர் பாதிக்கப்பட்டு, 35 பேர் உயிரிழந்துள்னர். கர்நாடகவில், 15 ஆயிரத்து, 570 பேர் பாதிக்கப்பட்டு, ஐந்து பேர் உயிரிழந்தனர்.

முதலிடத்தில் தமிழகம்;
டெங்கு பாதிப்பில், அக்டோபர் வரை, தமிழகம், மூன்றாம் இடத்தில் இருந்தது. ஒரு மாதத்தில், 7,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், அதிகம் பாதித்த மாநிலங்களில், தமிழகம் முதலிடத்தை பெற்றுள்ளது. கேரளா, கர்நாடக மாநிலங்களில், டெங்கு பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், தமிழகத்தில், கட்டுப்படுத்த முடியாமல், மாநில அரசு திணறி வருகிறது.

அடுத்த செய்தி