ஆப்நகரம்

மெரினாவில் ராட்டினத்தில் சிக்கிய 7 வயது சிறுவன் பரிதாப பலி!

சென்னை மெரினா கடற்கரையில், ராட்டினத்தில் சிக்கிய 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 21 May 2019, 7:45 am
சென்னை மெரினா கடற்கரையில், ராட்டினத்தில் சிக்கிய 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil Marry


சென்னை மயிலாப்பூர் கன்னிலால் தெருவைச் சேர்ந்தவர் பத்மநாபன். இவர், மெரினா கடற்கரையில் பானிபூரி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் பிரணவ் (7). தந்தை பத்மநாபன் உடன் மெரினா கடற்கரைக்கு வந்த பிரணவ் அங்கு விளையாடிக் கொண்டிருந்தான்.

அங்கு பிரகாஷ் என்பவர் தனது ராட்டினத்தை இயக்கிக் கொண்டிருந்தார். அப்போது, இரவு 7.30 மணி இருக்கும் நிலையில், பிரணவ் ராட்டினம் சுற்றுவதை நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். அப்படியே, ராட்டினம் அருகில் பிரணவ் சென்ற போது ராட்டினத்தின் கம்பி, பிரணவ்வின் தலையில் தாக்கியுள்ளது. இதில், மயக்கமடைந்த நிலையில், பிரணவ் அங்கேயே கீழே விழுந்தான்.

இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடனடியாக தூக்கிச் சென்றனர். ஆனால், சிறிது நேரத்திலேயே பிரணவ் பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் குறித்து அண்ணா சதுக்கம் காவல் துறையினர் ராட்டினம் இயக்கிய பிரகாஷிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உண்மையில், இது யாரது தவறு? கவனக்குறைவாக வந்த சிறுவன் மீது தவறா? இல்லை ராட்டினம் இயக்கியது தவறா? எதிர்பாராமல் மற்றும் கவனக்குறைவாக நடக்கும் ஒவ்வொரு சம்பவத்திற்கும் மற்றவர்கள் குற்றம் சாட்டப்படுவது நம் நாட்டில் நடந்து கொண்டு தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எது, எப்படியோ, பிரணவ்வின் தந்தை பத்மநாபன் இது குறித்து காவல் துறை அதிகாரியிடம் என்ன கூறுவார் என்பது விசாரணையில் தெரியவரும்.

அடுத்த செய்தி