ஆப்நகரம்

வடமாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய வடமாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 26 Jul 2019, 1:07 pm
தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த 1ம் தேதி முதல் தற்போது வரை 89 மி.மீ. மழை பதிவாகி உள்ளதாகவும், இது வழக்கத்தை காட்டிலும் 24 சதவீதம் குறைவு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil rain 1


தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி இன்றும் நீடிப்பதால் தமிழகத்தில் இன்றும் மழை பெய்யும். வடதமிழகம், தென்தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யக் கூடும்.

Also Read: புதுக்கோட்டையில் நடத்தப்பட்ட மொய் விருந்தில் ரூ.4 கோடி வசூல்

கர்நாடகா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை வலுவாக உள்ளது. தமிழகத்தில் இன்று வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Also Read: சிறையில் பிறந்து வளர்ந்த நளினியின் மகள் - உணர்ச்சி பொங்கும் தாயின் நினைவலைகள்!

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருபுவனம் பகுதியில் 9 செ.மீ., ஆரணி, திருப்பத்தூரில் 8 செ.மீ., உத்திரமேரூரில் 7 செ.மீ. மழை பதிவாக உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 1ம் தேதி முதல் தற்போது வரை 89 மி.மீ. மழை பதிவாக உள்ளது. வழக்கமாக 117 மி.மீ. பதிவாகும். தற்போது வழக்கத்தை காட்டிலும் 24 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி