ஆப்நகரம்

தமிழகத்திற்கு பறவைக் காய்ச்சல் வந்துவிட்டதா; உண்மை நிலவரம் என்ன?

பல்வேறு மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவத் தொடங்கியிருப்பதால் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Samayam Tamil 6 Jan 2021, 4:37 pm
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. இதன் காரணமாக ராஜஸ்தானில் ஏராளமான காகம் மற்றும் மயில்கள் உயிரிழந்துள்ளன. ஹிமாச்சல் பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் பறவைகள் பலியாகிவிட்டன. கேரள மாநிலம் ஆலப்புழா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் 1,500 வாத்துக்கள் இறந்துள்ளன. இதையடுத்து பறவைக் காய்ச்சலை மாநில பேரிடராக கேரள மாநில அரசு அறிவித்தது. இந்த சூழலில் தமிழகத்திற்கு பறவைக் காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் எல்லையோர மாவட்டங்கள் உஷார்படுத்தப் பட்டுள்ளன.
Samayam Tamil Bird Flu in Tamil Nadu


கால்நடை மருத்துவர், லைவ்ஸ்டாக் ஆய்வாளர், கண்காணிப்பாளர், இரண்டு உதவியாளர்கள் என 5 பேர் கொண்ட குழு எல்லையோர சோதனைச் சாவடிகளில் நிறுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு எட்டு மணி நேரத்திற்கு ஒருமுறை குழுவினர் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அடுத்த 90 நாட்கள் இத்தகைய சோதனை நடைபெறும். ஒருவேளை பறவைக் காய்ச்சல் தீவிரமடைந்தால் சோதனை மேலும் 90 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்று தமிழ்நாடு கால்நடைப் பராமரிப்புத்துறை தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ஷாக் நியூஸ்!
அனைத்து சோதனைச் சாவடிகளிலும் ட்ரக்குகள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்டவற்றின் சக்கரங்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகேவுள்ள படந்தலுமூடு சோதனை சாவடியில் கோழிகள், வாத்துகள், முட்டைகள், பறவைகளின் உணவுப் பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்த வாகனங்கள் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்டு விற்கப்படாமல் இருக்கும் பறவைகள், வாத்துகள் உள்ளிட்டவற்றை யாரும் வாங்க வேண்டாம். விற்கவும் வேண்டாம் என்று கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சுசீந்திரம் அருகே கரியமாநிகபுரம் பகுதியில் புலம்பெயர்ந்து வரும் பறவைகளுக்கு நோய்த்தொற்று இருக்கிறதா என்று கால்நடைத்துறை ஆய்வு செய்து வருகிறது.

தென்காசி மாவட்டம் புளியாரை சோதனைச் சாவடியில் கேரளாவில் இருந்து வாகனங்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் இருந்து காய்கறிகள் ஏற்றிக் கொண்டு தேனி மாவட்டத்திற்கு வரும் வாகனங்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் போடிமெட்டு, கம்பம்மெட்டு சோதனைச் சாவடிகளில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விஜய் சேதுபதியை பார்த்து நிவேதா பெத்துராஜுக்கு வந்த வினோத ஆசை
இதன்மூலம் தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்கள் சோதனை செய்யப்படுகின்றன. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பரவும் என்ற அச்சம் வேண்டாம். அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூறினார்.

அடுத்த செய்தி