ஆப்நகரம்

Chennai Rains: எப்படிப்பட்ட மழை தெரியுமா? அதுவும் 18 மாவட்டங்களில் - வானிலை மையம்!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 3 Nov 2019, 9:49 am
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. தமிழகத்திற்கு நேரடியாக மழை பொழிவை தரும் என்பதால், பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Samayam Tamil Rains2


முன்னதாக தமிழகத்தில் இயல்பை விட அதிகப்படியான தென்மேற்கு பருவமழை பெய்தது. இது வறண்டு கிடந்த மண்ணிற்கு புது ரத்தம் பாய்ச்சியது. பல்வேறு அணைகள் நிரம்பி பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இப்படியொரு வழக்கில் சிக்கிய மா.சுப்பிரமணியன்; தாக்கல் ஆனது குற்றப்பத்திரிகை!

பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை தமிழகத்திற்கு நல்ல மழையை தந்துள்ளது. இந்த சூழலில் சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளது.

அதன்படி, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. வடகிழக்கு பருவக் காற்றின் சாதகப் போக்கும் தொடர் மழைக்கு வாய்ப்பளிக்கிறது. குறிப்பாக 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதில்,

ஒருபுறம் நளினி, மறுபுறம் முருகன் - போராட்டக் களமான வேலூர் சிறை- மயங்கி விழுந்ததால் பதற்றம்!

1 - சேலம்
2 - ராமநாதபுரம்
3 - புதுக்கோட்டை
4 - நாகப்பட்டினம்
5 - திருவாரூர்
6 - தஞ்சாவூர்
7 - விழுப்புரம்
8 - கடலூர்
9 - திருவள்ளூர்
10 - காஞ்சிபுரம்
11 - மதுரை
12 - திண்டுக்கல்
13 - விருதுநகர்
14 - சிவகங்கை
15 - கன்னியாகுமரி
16 - தேனி
17 - தூத்துக்குடி
18 - திருநெல்வேலி

ஆகிய மாவட்டங்கள் அடங்கும். அந்தமான் தீவுகளை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது மேலும் வலுப்பெறக் கூடும். எனவே காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்படக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தில் களமிறங்கிய எம்பி கனிமொழி!

அடுத்த செய்தி