ஆப்நகரம்

Chennai Rains: அதிகாலை குளிர்ச்சி- தமிழகத்தில் இங்கெல்லாம் வெளுத்துக் கட்டிய மழை!

தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்று அதிகாலை நல்ல மழை பெய்துள்ளது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Samayam Tamil 6 Dec 2019, 8:14 am
தமிழகத்திற்கு நேரடியாக மழைப்பொழிவை தரும் வடகிழக்கு பருவமழை பரவலாக மழையை அளித்து வருகிறது. கடந்த சில வாரங்களாக வெளுத்துக் கட்டிய மழை தற்போது சற்றே ஓயத் தொடங்கியுள்ளது.
Samayam Tamil Rain10


இருப்பினும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், குமரிக் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

உள்ளாட்சி தேர்தல் - வேட்பு மனுக்கள் பெற வேண்டாம்!

இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

40 முதல் 50 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே குமரிக்கடல், மாலத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் இன்று செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கெமிக்கல் மூலம் வாழைப் பழத்தைப் பழுக்க வைக்கிறார்கள்!

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. நகரின் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் என நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் மதுரையில் இன்று அதிகாலை வேளையில் நல்ல மழை பெய்தது. இதேபோல் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தவருக்கு ஜாமீன்!

அடுத்த செய்தி