ஆப்நகரம்

பொன்னேரியில் சிறுமிக்கு பாலியல் கொடுமை!

திருவள்ளூர்அருகே ஐந்து வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை அப்பகுதிவாசிகள் அடித்து உதைத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Samayam Tamil 20 Apr 2018, 10:36 am
திருவள்ளூர் அருகே ஐந்து வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை அப்பகுதிவாசிகள் அடித்து உதைத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
Samayam Tamil 3


ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சின்ராவுத்- சம்சா தம்பதியினர், போராக்ஸ் பகுதியில் 7 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். நேற்று மாலை இவர்களின் 5 வயது மகள் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த பரவத் சிங் சிறுமியை தூக்கி சென்று, பாலியல் வன்கொடுமை கொடுத்துள்ளார். இதை அந்த சிறுமி பெற்றோரிடம் தெரிவிக்க, மருத்துவமனையில் சிறுமியை சோதித்துள்ளனர். அதில் சிறுமிக்கு ரத்த கசிவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து வடமாநிலத்தை சேர்ந்த அந்த இளைஞரை அப்பகுதிவாசிகள் அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை அதிகரித்து வரும் நிலையில், பொன்னேரி அருகே நடந்துள்ள இச்சம்பவம் பொதுமக்கள், பெற்றோர்கள் மத்தியில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி