ஆப்நகரம்

குற்றவாளி அரசை ஆதரிக்கும் மானங்கெட்ட எம்.எல்.ஏ.,க்களை புறக்கணியுங்கள்: கட்ஜு ஆவேசம்

''சிறையில் இருக்கும் குற்றவாளியின் பொம்மை அரசுக்கு ஆதரவு தெரிவித்து வரும் எம்.எல்.ஏ.,க்களை புறக்கணியுங்கள் . உங்கள் பகுதிக்கு வந்தால் கருப்புக் கொடி காட்டுங்கள்'' என்று உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜூ தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

TOI Contributor 9 Mar 2017, 5:11 pm
''சிறையில் இருக்கும் குற்றவாளியின் பொம்மை அரசுக்கு ஆதரவு தெரிவித்து வரும் எம்.எல்.ஏ.,க்களை புறக்கணியுங்கள் . உங்கள் பகுதிக்கு வந்தால் கருப்புக் கொடி காட்டுங்கள்'' என்று உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜூ தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
Samayam Tamil shameless mlas supporting that puppet of the convicted must be socially boycotted and not invited anywhere markandey katju
குற்றவாளி அரசை ஆதரிக்கும் மானங்கெட்ட எம்.எல்.ஏ.,க்களை புறக்கணியுங்கள்: கட்ஜு ஆவேசம்


இதுகுறித்து, அவர் தமது பேஸ்புக்கில் தெரிவித்திருப்பதாவது:

தமிழர்களே, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமாக ஒட்டுமொத்த உலகையே வியக்க வைத்தீர்கள். தற்போது மேலும் ஒரு ஹீரோயிசத்தை உங்களிடம் இருந்து இந்த நாடே எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறது. குற்றவாளியாக சிறையில் இருந்து ஆட்சி செய்யும் பொம்மை அரசுக்கு எதிராக அனைவரும் வெகுண்டு எழ வேண்டும். மானங்கெட்ட எம்.எல்.ஏ.,க்களின் வீட்டுக்கு வெளியே அமைதியாக , சட்ட ரீதியில் நீங்கள் போராட்டம் நடத்த வேண்டும்.

இந்த எம்.எல்.ஏ.,க்கள் எங்கு சென்றாலும் அவர்களுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டுங்கள். அதுவும், சட்டப்படியனதாக இருக்க வேண்டும். சமூகத்தில் இருந்து அவர்களை ஒதுக்க வேண்டும். அவர்களை எந்த விழாக்களுக்கும் அழைக்க வேண்டாம். வலிமையான, வீரம் மிகுந்த தமிழ் மக்களின் கோபத்தை உணரும் வகையில் இந்தப் போராட்டங்கள் இருக்க வேண்டும். தமிழர்களே நீங்கள் அனைவரும் வீரம் படைத்த ராஜராஜ சோழன் வழியில் வந்தவர்கள்'' என்று கட்ஜு பதிவிட்டுள்ளார்.

shameless MLAs supporting that puppet of the convicted must be socially boycotted, and not invited anywhere.:Markandey Katju

அடுத்த செய்தி