ஆப்நகரம்

நாசாவுக்கு உதவிய சண்முக சுப்ரமணியன் முதல்வர் பழனிசாமியுடன் சந்திப்பு!

தமிழகத்தை சேர்ந்த பொறியாளர் சண்முக சுப்ரமணியன், விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் இருக்கும் இடம் குறித்து நாசாவிற்கு தெரியப்படுத்தினார்

Samayam Tamil 4 Dec 2019, 2:02 pm
சென்னை: விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவுக்கு உதவிய சண்முக சுப்ரமணியன் முதல்வர் பழனிசாமியை சந்தித்துள்ளார்.
Samayam Tamil முதல்வருடன் சண்முக சுப்ரமணியன்
முதல்வருடன் சண்முக சுப்ரமணியன்


நிலவின் தென் துருவத்தை ஆராய இஸ்ரோ சார்பில் சந்திரயான்2 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி அனுப்பப்பட்டது. சந்திரயான் 2 விண்கலத்தில் விக்ரம் லேண்டர், ஆர்பிட்டர், ரோவர் உள்ளிட்டவை இருந்தன.

இஸ்ரோ திட்டமிட்டிருந்தபடி, சந்திரயான் 2 விண்கலத்திலிருந்து ஆர்பிட்டர் தனியாக பிரிந்து நிலவை சுற்றிவரத் தொடங்கியது. ஆனால், நிலவில் தரையிரங்க 2 கிலோ மீட்டர் தொலைவே இருந்த நிலையில் லேண்டர்‌ உடனான தொடர்பு கடந்த செப்ட்டம்பர் மாதம் 7ஆம் தேதி துண்டிக்கப்பட்டது.

விக்ரம் லேண்டரை முதல்ல கண்டுபிடிச்சது யாரு: இஸ்ரோவா சண்முக சுப்ரமணியனா?

இதனையடுத்து லேண்டரை கண்டுபிடிக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டது. அதற்கு அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவும் உதவி புரிந்து வந்தது. இந்த ஆய்வின் ஒருபகுதியாக, விக்ரம் லேண்டர் தரையிறக்க திட்டமிடப்பட்ட இடத்தின் புகைப்படத்தை நாசாவின் லுனார் ரிகனைஸ்ஸான்ஸ் ஆர்பிட்டர் மூலம் செப்டம்பர் 26ஆம் தேதி நாசா வெளியிட்டது.

Vikram lander: விக்ரம் லேண்டரை மீண்டும் ‘கண்டுபிடித்த’ தமிழர்!
அதனைக் கொண்டு ஆய்வு செய்த தமிழகத்தை சேர்ந்த பொறியாளர் சண்முக சுப்ரமணியன், விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் இருக்கும் இடம் குறித்து நாசாவிற்கு தெரியப்படுத்தினார். அதனடிப்படையில், ஆய்வு செய்த நாசாவும் அதனை உறுதிபடுத்தியுள்ளது.

இந்நிலையில், விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவுக்கு உதவிய சண்முக சுப்ரமணியனை நேரில் அழைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டியுள்ளார்.

அடுத்த செய்தி