ஆப்நகரம்

காவேரி மருத்துவமனைக்கு வந்து, கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரித்த சரத் பவார்!

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர சரத்பவார் நேரில் வந்து கேட்டறிந்தார்.

Samayam Tamil 30 Jul 2018, 7:59 pm
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் நேரில் வந்து கேட்டறிந்தார்.
Samayam Tamil காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரித்த சரத் பவார்!
காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரித்த சரத் பவார்!

திமுக தலைவராக 50வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள கருணாநிதிக்கு, கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நலம் மோசமாக பாதிக்கப்பட்டது. இதனிடையே, கடந்த வெள்ளிக்கிழமை இரவு, ரத்த அழுத்தம் குறைந்ததால், உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவமனையில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்துச் செல்கின்றனர். இதனிடையே, கருணாநிதியின் உடல்நலம் சரியாக வேண்டும் என திமுக தொண்டர்கள் பலரும் மருத்துவமனை வெளியே நாள் முழுவதும் காத்துக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், இன்று மாலை காவேரி மருத்துவமனைக்கு வந்து, கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் விசாரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் சார்பாக வந்திருந்த பிரதிநிதிகள்

அதேபோல், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் சார்பாக வந்திருந்த பிரதிநிதிகள், கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும் என இலங்கை அதிபர் எழுதிய கடிதத்தை மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்தனர்.

அடுத்த செய்தி