ஆப்நகரம்

வேன் மோதி 40 ஆடுகள் மற்றும் ஒருவர் பலி

அதிகாலை நேரத்தில் வேன் மோதி, நாற்பது ஆடுகள் மற்றும் ஆடு மேய்ப்பவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

TOI Contributor 2 May 2017, 5:24 pm
ஈரோடு: அதிகாலை நேரத்தில் வேன் மோதி, நாற்பது ஆடுகள் மற்றும் ஆடு மேய்ப்பவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
Samayam Tamil shepherd and 40 sheep fatally run over by van in tn
வேன் மோதி 40 ஆடுகள் மற்றும் ஒருவர் பலி


கோவையில் சில நபர்களை இறக்கி விட்டு கோபிச் செட்டிப்பாளையம் நோக்கி வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. ஈரோடு மாவட்டம் கொடிவேரி குறுக்கு சாலை அருகே அதிகாலை சுமார் 5.45 மணியளவில் வேன் வந்து கொண்டிருந்த போது, சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் திடீரென சாலையில் புகுந்துள்ளன. இதனை சற்றும் எதிர்பாராத ஓட்டுனர் ராஜா, உடனனடியாக வண்டியை பிரேக் போட்டு நிறுத்த முயன்றுள்ளார். ஆனால், அதற்குள்ளாகவே, வேன் மோதியதில் நாற்பது ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

இந்த விபத்தில் படுகாயமடைந்த கோவை மாவட்டம் சூலூரைச் சேர்ந்த மருதாச்சலம் எனும் ஆடு மேய்ப்பவரை, அப்பகுதி மக்கள் மீட்டு கோபிச் செட்டிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனையை அடையும் முன்னரே அவர் பரிதாபமாக அவரும் உயிரிழந்துள்ளார்.

விபத்து நடைபெற்ற போது, அப்பகுதியில் மிதமான மழை வேறு பெய்து கொண்டிருந்தது என்பது கவனிக்கத்தக்கது. அதேசமயம், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், வேன் ஓட்டுனர் ராஜாவை கிசு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Shepherd and 40 sheep fatally run over by van in TN

அடுத்த செய்தி