ஆப்நகரம்

அதிமுக கவுன்சிலரின் சொத்து மதிப்பைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதி

12 பங்களாகளுக்கு சொந்தக்காரரான அதிமுக கவுன்சிலர் தனக்கு ஒரு வீடு கூட கிடையாது என வேட்புமனுவில் தெரிவித்திருப்பதைக் கண்டு நீதிபதி அதிர்ச்சியடைந்தனர்.

TNN 4 Dec 2016, 7:07 pm
12 பங்களாகளுக்கு சொந்தக்காரரான அதிமுக கவுன்சிலர் தனக்கு ஒரு வீடு கூட கிடையாது என வேட்புமனுவில் தெரிவித்திருப்பதைக் கண்டு நீதிபதிகள் அதிர்ச்சியடைந்தனர்.
Samayam Tamil shocked the judge hearing the asset value of the aiadmk councilor
அதிமுக கவுன்சிலரின் சொத்து மதிப்பைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதி


சென்னை ஈச்சம்பாக்கத்தைச் சேர்ந்த பொன் வேலு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கவுன்சிலர்கள் சொத்து விபரம் குறித்து விசாரிக்குமாறு பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணை வந்தது அப்போது, மனுதாரர் கடந்த முறை கவுன்சிலராக இருந்த அண்ணாமலை என்பவர் 12 பங்களாக்களுக்கு சொந்தகாரர் ஆனால் தனது வேட்புமனுவில் ஒரு வீடு கூட இல்லை என கூறியிருக்கிறார் என்று ஆதாரத்துடன் நிருப்பித்தார்.

இதனைதொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இதுவரை மாநாகராட்சி கவுன்சிராக இருத்தவர்களின் சொத்து விபரத்தையும், தற்போதைய உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தவரின் சொத்து விவரத்தையும் தெரிவிக்குமாறு மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டப்படுகிறது.

மேலும் இந்த வழக்கு தலைமை நீதிபதியின் அமர்வுக்கு மாற்றப்படுகிறது . மேலும் மனுதாரருக்கு உடனடியாக போலீஸ் பாதுகாப்பு வழங்க ஆணையருக்கு உத்தரவிடுகிறேன். கவுன்சிலர் அண்ணாமலை 12 பங்களாக்கள் வாங்க அவருக்கு பணம் எப்படி வந்தது? என்பதை குற்றவியல் நடவடிக்கையாக கருதி போலீஸார் விசாரிக்க வேண் டியுள்ளது. அதற்காக இந்த வழக் கில் டிஜிபியையும் எதிர்மனுதாராக சேர்க்கிறேன்’’ என நீதிபதி கூறினார்.

அடுத்த செய்தி