ஆப்நகரம்

Onion Price: வெங்காயத்தால் அடிவயிறு கலங்கி கண்ணீர் சிந்தும் ஸ்டாலின்!

வெங்காயம் விற்கும் விலையை நினைத்துப் பார்த்தாலே கண்களில் கண்ணீர் வருகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 9 Dec 2019, 2:43 pm
நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தங்கம், வெள்ளி, டீசல், பெட்ரோல் போல வெங்காயமும் இன்று கிடுகிடு விலையை வேகமாக எட்டிப் பிடிக்கும் பொருட்களுள் ஒன்றாக மாறிவிட்டது. முட்டை ஆம்லெட்டில் வெங்காயத்தை விலக்கிவிட்டு முட்டைக்கோஸ் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்.
Samayam Tamil MK Stalin1


கடைகள் வெங்காயம் பயன்படுத்துவதால் பிரியாணி விலை கூடிவிட்டது. கடலூரில் 2 நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு திருமணத்தில் மணமக்களுக்கு வெங்காயத்தை பரிசுப் பொருட்களாக கொடுத்து வாழ்த்திச் சென்றுள்ளார்கள். இவ்வாறு வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ள வெங்காயம் ஏழை - எளிய - நடுத்தர மக்களுக்கு எட்டாத அபூர்வமான பொருளாகி விட்டது.

சரிந்தது விலை; வந்திருச்சு இறக்குமதி வெங்காயம் - திருச்சி நிலவரம் இதோ!

கடந்த நவம்பர் முதல் வாரத்தில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.60க்கு விற்பனை ஆனது. நவம்பர் இரண்டாவது வாரத்தில் ரூ.10 அதிகரித்து, கிலோ ரூ.70க்கு விற்கப்பட்டது. டிசம்பர் 2ஆம் தேதி ரூ.110க்கு உயர்ந்தது. டிசம்பர் 2வது வாரத்தில் ரூ.140ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து தொடர்ந்து ரூ.200, ரூ.230, ரூ.250 என புதிய உச்சத்தை தொட்டுவிட்டது. இதனால் பெரும்பாலான மக்கள் வெங்காயம் வாங்குவதையே விட்டுவிட்டனர். இவ்வாறு விலை உயர்ந்ததற்கு மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்த மழை காரணம் என்று சொல்லப்படுகிறது.

நாடு முழுவதும் பிரச்சினை இருந்தாலும் மற்ற மாநிலங்கள் வெங்காய தேவையை சமாளித்துக் கொண்டன. ஆனால் தமிழகம் பின்தங்கி விட்டது. இது ஏதோ சாதாரண வெங்காயம் தானே என்று ஆட்சியாளர்கள் நினைக்கக் கூடாது.

நிர்பயா குற்றவாளிகளை நான் தூக்கில் போடுகிறேன் - டெல்லிக்கு சிக்னல் கொடுத்த ராமநாதபுரம் ஏட்டு!

கடந்த தேர்தல் முடிவுகளை மாற்றக் கூடிய முக்கியமான அம்சமாக வெங்காயத்தின் விலை இருந்துள்ளது. விவசாய நாடு என்று சொல்லிக் கொள்கிறோம். ஆனால் அன்றாட உணவுப் பொருளை வெங்காயம் குறித்த முறையான திட்டமிடுதலே இன்றைய ஆட்சியாளர்களுக்கு இல்லை.

வரும் ஜனவரி 20ஆம் தேதிக்கு பிறகு வெங்காயம் தாராளமாக கிடைக்கும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்துவிடுவோம் என்று மத்திய உணவுத்துறை அமைச்சர் கூறுகிறார். அப்படி என்றால் நிலைமை சீரடைய இன்னும் 2 மாதங்களுக்கு மேல் ஆகலாம்.

ஊட்டியில் இப்படியொரு தடங்கல்; இன்னைக்கு இப்படி யாரும் போக முடியாது!

மத்திய, மாநில அரசுகளின் மெத்தனம் காரணமாக மக்களின் அடிவயிறு கலங்கிக் கிடக்கிறது. உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு இன்றியும், நியாய விலையிலும் கிடைப்பதற்கு மத்திய - மாநில அரசுகள் கவனம் செலுத்துவது மட்டுமின்றி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி