ஆப்நகரம்

டாஸ்மாக் அவலம்: போதையில் மயங்கிக் கிடந்த பள்ளிச் சிறுவர்கள்!

திருச்சியில் மது போதையில் பேருந்து நிலையத்தில் மயங்கிக் கிடந்த அரசு பள்ளி மாணவர்களை அப்பகுதியினர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

TNN 17 Jul 2017, 9:49 pm
திருச்சியில் மது போதையில் பேருந்து நிலையத்தில் மயங்கிக் கிடந்த அரசு பள்ளி மாணவர்களை அப்பகுதியினர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
Samayam Tamil shocking school boys found unconscious after taking liquor
டாஸ்மாக் அவலம்: போதையில் மயங்கிக் கிடந்த பள்ளிச் சிறுவர்கள்!


தமிழகத்தில் மது ஒழிப்புக்காக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், தமிழக அரசு விற்பனை குறைவான டாஸ்மாக் கடைகளை பெயரளவில் மூடிவிட்டு பெரிய கடைகளில் அதிகமாக பாட்டில்களை விற்று லாபம் பார்க்கிறது என்று குற்றம்சாட்டப்படுகிறது.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் உள்ள கோவில்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இருவர் குடித்துவிட்டு சீருடையுடன் பேருந்து நிலையத்தில் விழுந்து கிடந்துள்ளனர். அவர்கள் இருவரும் வகுப்புகளை 'கட்' அடித்துவிட்டு வந்திருப்பது தெரியவந்துள்ளது.

சுருண்டு கிடந்த சிறுவர்களை அப்பகுதி மக்கள் பார்த்துவிட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

அடுத்த செய்தி