ஆப்நகரம்

சிவகாசியில் அனைத்துக்கட்சி சாா்பில் இன்று கடையடைப்பு

பட்டாசு ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக அனைத்து கட்சி சார்பில் சிவகாசியில் கடையடைப்பு போராட்டம் இன்று நடைபெற்றது. மேலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பேரணியில் ஈடுபட்டனர்.

TNN 3 Jan 2018, 4:26 pm
பட்டாசு ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக அனைத்து கட்சி சார்பில் சிவகாசியில் கடையடைப்பு போராட்டம் இன்று நடைபெற்றது. மேலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பேரணியில் ஈடுபட்டனர்.
Samayam Tamil shops shut down for sivakasi fire workers protest
சிவகாசியில் அனைத்துக்கட்சி சாா்பில் இன்று கடையடைப்பு


பட்டாசு வெடிப்பதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது தொடர்பான பொதுநல வழக்கு உச்சநீதிமன்றத்தில் வருகின்ற 5 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. பட்டசுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்க வாய்ப்புள்ளதால் பட்டாசு தொழிலாளர்கள் கடந்த 9 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இந்த வழக்கின் தீா்ப்பால் வெளிமாநில பட்டாசு விற்பனையாளர்கள் தனது ஆடர்கள் திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

கடந்த 26 ஆம் தேதியிலிருந்து சிவாகாசியை சேர்ந்த பட்டாசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 9 வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பட்டாசு தொழிலாளா்களின் போராட்டத்திற்கு ஆதரவு தொிவித்து சிவகாசியில் அனைத்து கட்சி சாா்பில் கடையடைப்பு போராட்டம் இன்று தொடங்கியுள்ளது. மேலும் ஆட்டோ ஓட்டுநா்களும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனா்.
போராட்டத்தின் ஒரு கட்டமாக பட்டாசு தொழிலாளா்கள் பேரணி நடத்தினர். சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். சிவகாசி காமராஜர் சிலையிலிருந்து பேரணி தொடங்கி, கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பட்டாசு தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

அடுத்த செய்தி