ஆப்நகரம்

கமல் வீட்டுல கொரோனா நோட்டீஸ் ஒட்டுனா வேலைய விட்டு எடுப்பீங்களா: மாநகராட்சிக்கு ஆணையம் கேள்வி!

நடிகர் கமல்ஹாசன் வீட்டில் தனிமைப்படுத்தல் நோட்டீஸ் ஒட்டிய விவகாரத்தில் சென்னை மாநகராட்சிக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

Samayam Tamil 23 Jul 2020, 4:36 pm
சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹசன் வீட்டில் கொரோனா தனிமைப்படுத்துதலுக்கான நோட்டீஸ் அண்மையில் ஒட்டப்பட்டது. இந்த விவகாரம் சர்ச்சை ஏற்படுத்தியது கமலுக்கு தெரியாமலேயே அங்கு நோட்டீஸ் ஒட்டப்பட்டதாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் குற்றம் சாட்டினர்.
Samayam Tamil நோட்டீஸ் ஒட்டிய வினோத்குமார்
நோட்டீஸ் ஒட்டிய வினோத்குமார்


அத்துடன், ஆழ்வார்பேட்டை வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக தான் வசிப்பதில்லை என்றும் கட்சியின் அலுவலகமாக அந்த இடம் செயல்படுகிறது எனவும் தெரிவித்து கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். தொடர்ந்து, அந்த நோட்டீஸ் அகற்றப்பட்டது. இதனிடையே, அந்த நோட்டீஸை தவறுதலாக ஒட்டிவிட்டதாக சென்னை மாநகராட்சி சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், கமல்ஹாசன் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய மாநகராட்சி ஒப்பந்த பணியாளர் வினோத்குமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். எனினும், அதற்கான உத்தரவு எதுவும் அவருக்கு வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சியின் உயரதிகாரி மதுசூதனனை சந்தித்து வினோத்குமார் முறையிட்ட போது, அவரை பணி நீக்கம் செய்யவில்லை என்றும் மே மாதம் 9ஆம் தேதி முதல் பணிக்கு செல்லலாம் என்றும் மதுசூதனன் கூறியதாக தெரிவித்துள்ளார்.

“கந்தன் விவகாரத்தில் ரஜினி லேட்தான்” பாஜக முருகன் விமர்சனம்!

அதன்படி, வேலைக்குச் சென்றபோது வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட அனுமதிக்காமல் அதிகாரிகள் அலைக்கழித்துள்ளனர். இதனால், மன உளைச்சலில் இருந்த அவர், எனக்கு மேல் உள்ள அதிகாரிகள் செய்த தவறை மறைக்க என் மீது பழிசுமத்தப்பார்க்கிறார்கள் என்று குற்றம் சாட்டியிருந்தார்.

மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

வினோத்குமார் புகார்

வினோத்குமார் புகார்


மேலும், இது தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையதிடமும் அவர் புகார் அளித்தார். அதன் பேரில், வினோத்குமாருக்கு பணி வழங்காதது தொடர்பாக 4 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆனையருக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அடுத்த செய்தி