ஆப்நகரம்

சி.ஏ.ஏ. போராட்டத்தால் ஸ்ரீ.420 டெல்லி தேர்தலில் தோற்கப்போகிறார்: சுப்ரமணியன் சுவாமி

பாஜகவைப் பொறுத்தமட்டில், எந்த ஒன்றைக் குறித்தும் வெகு வெளிப்படையாகக் கருத்துச் சொல்லும் நபர் என்ற பட்டியலில் சுப்ரமணிய சுவாமிக்குத் தான் முதலிடம்

Samayam Tamil 13 Jan 2020, 7:42 pm
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பது பாஜகவுக்குச் மேலும் மேலும் சாதகமானதுதான் என்று பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். மேலும் ஸ்ரீ420 தேர்தலில் தோற்கப் போகிறார் என்றும் நக்கலாக ட்வீட் செய்துள்ளார்.
Samayam Tamil சுப்ரமணியன் சுவாமி


பாஜகவைப் பொறுத்தமட்டில், எந்த ஒன்றைக் குறித்தும் வெகு வெளிப்படையாகக் கருத்துச் சொல்லும் நபர் என்ற பட்டியலில் சுப்ரமணிய சுவாமிக்குத் தான் முதலிடம். அந்த அளவுக்குத் தன் கருத்துகளால் அறியப்படக் கூடிய சுப்ரமணிய சுவாமி, தற்போது டெல்லி தேர்தலில் தோல்வி அடையப்போகிறார் ஸ்ரீ.420 என்று தன் பாணியில் மேலுமொரு கருத்தை தெரிவித்திருக்கிறார்.


இது தொடர்பாக, சு.சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

குடியுரிமை சட்டத்தை எதிர்க்கட்சிகள் அதிகமாக எதிர்க்க எதிர்க்க தேர்தல்களில் பாஜ.கவுக்குத்தான் நல்லது. இந்த ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் இப்படியே தொடர்ந்தால், ஸ்ரீ 420, எதிர்வரும் டெல்லி மாநிலத் தேர்தலில் தோல்வியடையக்கூடும்” என்று தெரிவித்திருந்தார்.

ஸ்ரீ420 என்று அவர் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலைத் தான் குறிப்பிட்டாரா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. இந்நிலையில் இதனை ரீட்வீட் செய்து வரும் நெட்டிசன்கள் பலரும் நீங்கள்தான் 420 என்ற தொனியில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி