ஆப்நகரம்

கோடநாடு வீடியோ விவகாரம்; டெல்லியில் ஷயான், மனோஜ் அதிரடி கைது!

சென்னை: ஷயான், மனோஜ் கைது குறித்து, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 13 Jan 2019, 8:07 pm
மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமாக கோடநாடு எஸ்டேட் உள்ளது. அங்கிருந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதை மறைக்கவே, கார் ஓட்டுநர் கனகராஜ் உள்ளிட்ட 5 பேர் கொல்லப்பட்டதாக ஆவணப்படம் ஒன்று டெல்லியில் ஒளிபரப்பப்பட்டது.
Samayam Tamil Kodanad


அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியிடப்பட்டது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அதிமுக தொழில்நுட்பப் பிரிவு மாநில இணை செயலாளர் ராஜன் சத்யா, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் டெல்லியில் பேட்டியளித்த கூலிப்படைத் தலைவர் ஷயான், மனோஜ், தெகல்கா புலனாய்வு பத்திரிகை முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து மேத்யூஸை பிடிக்க தனிப்படை போலீசார் டெல்லி சென்றனர். சயனை பிடிக்க கேரளா சென்றனர்.

இந்நிலையில் ஷயான், மனோஜ் ஆகியோர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாத் கூறியுள்ளார். இருவரும் இன்று இரவு சென்னை அழைத்து வரப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி