ஆப்நகரம்

கொரோனாவில் இருந்து மீள உதவும் சித்த மருத்துவம்!

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீள சித்த மருத்துவ சிகிச்சைக்கு நல்ல பலன் கிடைத்திருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Samayam Tamil 24 May 2020, 3:45 pm
இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிராவுக்கு அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,512 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 103ஆகவும் உள்ளது. குறிப்பாக, சென்னையில் அதிகளவிலான கொரோனா பாதிப்புகள் நாள்தோறும் உறுதி செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய நிலவரப்படி சென்னையில் மட்டும் 9,989 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


அதேபோல், சென்னை கோயம்பேடு சந்தை மூலம் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கொரோனா பாதிப்புகள் அதிகமாக பரவியதாக கூறப்படுகிறது. கோயம்பேடு பகுதியில் மட்டும் நாள்தோறும் 10 முதல் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்தது. இதையடுத்து, சித்தமருத்துவர் வீரபாபு கடந்த வாரம் முழுவதும் அப்பகுதி மக்களுக்கு கபசுர குடிநீர் உள்ளிட்ட கசாயம் கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கோயம்பேடு பகுதியில் இன்று ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என தெரிகிறது. அத்துடன், கொரோனா சிகிச்சையில் சித்த மருத்துவத்துக்கு நல்ல பலன் கிடைத்துள்ளாதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனாவுக்கு மருந்து இருக்குன்னு சொன்னவர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!!

உலகை மிரட்டி வரும் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டறிவதில் உலக மருத்துவ வல்லுநர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேசமயம், மலேரியாவை குணப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை பரிசோதனை அடிப்படையில் மருத்துவர்கள் பரிந்துரைத்து வருகின்றனர்.

அதேபோல், பிளாஸ்மா சிகிச்சை, மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் பரிந்துரைப்படி வழங்கப்படும் ஹோமியோபதி மருந்தான ஆர்செனிகம் ஆல்பம்-30, கபசுர குடிநீர் உள்ளிட்டவைகளும் கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், இதுவரை அதிகாரப்பூர்வ தடுப்பூசியோ, மருந்தோ கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி